states

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டுமா?

புதுதில்லி, செப். 2 - சமஸ்கிருதத்தை தேசிய மொழி யாக அறிவிக்கக்  கோரும் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி யும் வழக்கறிஞருமான கே.ஜி. வன்சாரா என்பவர் இதுதொடர்பான பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். சமஸ்கிருதம் ‘தாய் மொழி’ ஆகும். அதில் இருந்து மற்ற மொழி கள் உத்வேகம் பெற்றன. எனவே, சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தர விட வேண்டும். அத்தகைய நட வடிக்கை, நாட்டின் அலுவல் மொழி களாக ஆங்கிலம் மற்றும் இந்தியை  வழங்கும் தற்போதைய அரசிய லமைப்பு விதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  வெள்ளிக்கிழமையன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, சமஸ்கிருதத்தை தேசிய மொழி யாக்கக் கோரும் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. “இந்த மனுவில் எழுப்பப் பட்டுள்ள பிரச்னையை பரிசீலிக்க சரி யான மன்றம் நாடாளுமன்றமே தவிர  நீதிமன்றம் அல்ல.  அவ்வாறிருக்க, நாங்கள் ஏன் அறிவிப்பை வெளியிட வேண்டும் அல்லது விளம்பரத்திற் காக நோட்டீஸ் அனுப்பவேண்டும்?”  என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “பல மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து சொற்களை எடுத்துள்ளன என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் அதற்கான, அதை நாங்கள் தேசிய மொழியாக அறிவிக்க முடியும் என்று அர்த்தமல்ல” என்று தெரிவித்தனர். ஒரு கட்டத்தில், மனுதாரரை சமஸ்கிருதத்தில் ஒரு பத்தி பேசும்படி கேட்டுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், “இதை விவாதிப்ப தற்கான சரியான மன்றம் நாடாளு மன்றம்தான்.  இதற்கு அரசியலமைப்பில் திருத்தம் தேவை” என்று கூறி, பொது நல வழக்கைத் தள்ளுபடிசெய்தனர்.