புதுதில்லி, ஜூலை 30- எதிர்க்கட்சிகளின் உறுதிமிக்க போராட்டத்தைத் தொடர்ந்து, விலை வாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி தொடர் பான பிரச்சனைகள் திங்களன்று நாடாளு மன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளி யாகியுள்ளன. ஆகஸ்ட் 1-ஆம் தேதி மக்களவை யிலும், அதற்கு மறுநாள் மாநிலங்கள வையிலும் இதுதொடர்பான விவாதங் கள் நடைபெறும் என்றும் அந்த தகவல் கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், விலைவாசியுடன் தொடர்புடைய சில்லரை விலைப் பண வீக்கம் ஜூன் மாதத்தில் 6.26 சதவிகிதத்தி லிருந்து 7.01 சதவிகிதமாக உயர்ந்தது. 2 முதல் 6 சதவிகிதம் வரையே பணவீக்கம் இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கணித்திருந்த நிலையில், தொடர்ந்து ஆறாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் கணிப்பைத் தாண்டி பணவீக்கம் அதி கரித்தது.
இது போதாதென்று, இதுவரை வரி விதிக்கப்படாத அரிசி, கோதுமை, பருப்பு, பால், தயிர் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களுக்கு ஜூலை 18-ஆம் தேதி முதல் ஒன்றிய அரசு 5 சதவிகிதம் வரி விதித்தது. அட்லஸ்கள் உள்ளிட்ட வரைபடங்களுக்கு ( Maps and charts including atlases ) 12 சதவிகிதமும், எல்இடி விளக்குகள், எல்இடி சாதனங் கள், கத்தரிக்கோல் போன்ற தையல் சார்ந்த பொருட்கள் மற்றும் பென்சில், ஷார்பனர்கள் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், பிளேடுகள், ஸ்பூன்கள், போர்க்ஸ் போன்ற சில்வர் பொருட்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகி தத்தில் இருந்து 18 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டன. மருத்துவமனைகளில் நோயாளிகள் தங்கியிருக்கும் அறை களுக்கும் 5 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப் பட்டது. இதனால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டது.
கொரோனா தொற்றுப் பாதிப்பால் தொழில் முடக்கம், வேலையின்மை உள் ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் ஏற்கெ னவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது மேலும் சுமையை ஏற்றும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் மோடி அரசு மேலும் விலைவாசி உயர் வுக்கு இட்டுச் சென்றது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18-ஆம் தேதி துவங்கிய நிலையில், இந்த விவகா ரத்தை கிளப்பிய எதிர்க்கட்சிகள், மக்க ளைத் தாக்கும் மிக முக்கியப் பிரச்சனை யான விலைவாசி உயர்வு குறித்து, நாடா ளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்
என்று கோரிக்கை விடுத்தனர். பதாகை களை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், ஒன்றிய பாஜக அரசு அதற்கு சம்மதிப்பதாக இல்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கொரோனா ஏற் பட்டுள்ளது; அவர் குணமடையும் வரை விலைவாசி குறித்து பேச முடியாது என்று சாக்குப் போக்குகளைக் கூறியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடா ளுமன்ற விதிப் புத்தகத்தை மேற்கோள் காட்டி னார். பட்டியலிடப்பட்ட விவகாரங்களில் மட்டுமே விவாதம் நடைபெறும். பட்டிய லிடப்படாத பிரச்சனைகளுக்கு பூஜ்ஜிய நேரத்தில் மட்டுமே அனுமதி கொடுப்பேன் என்று அவர் கூறினார்,
எனினும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போராட்டம் தொடர்ந்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த 27 எம்.பி.க்கள் மீது இடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமையன்று நிர்மலா சீதாராமன் தொற்று குணமடைந்து, நாடாளு மன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். அமைச்சர்கள் கூறியபடி, அன்றைய தினம் விலைவாசி குறித்த விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உறுதி மொழியை மோடி அரசு காப்பாற்றவில்லை. மாறாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வை, காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘ராஷ்டிர பத்னி’ என்று இழிவுபடுத்தி விட்டதாகவும், இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தலைமையில் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். விலை வாசி உயர்வு விவாதத்தைக் தடுக்கும் வகை யில் கலகம் செய்தனர். வெள்ளிக்கிழமை யன்றும் தொடர்ந்து 2 நாட்களாக அவையை முழுமையாக முடக்கினர். இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுமே ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைக் கப்பட்டன.
பாஜக அமைச்சர்கள் இவ்வாறு நாட கங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த நிலையில், மறுபுறத்தில், ‘விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தை நடத்தாமல் மோடி அரசை விடுவதாக இல்லை’ என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, இரவும் - பகலுமாக தொடர் தர்ணாவில் இறங்கினர். இந்தப் போராட்டம் மூன்று நாட்களுக்கும் மேலாக தொடர்ந்தது. இதையடுத்து, தற்போது மோடி அரசு ஒருவழியாக இறங்கி வந்துள்ளது. விலை வாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து ஆகஸ்ட் 1, 2, ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற வாய்ப்பிருப்பதாக நாடாளுமன்ற வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. விதி எண் 193-ன் கீழ் மக்களவையில் திங்கட்கிழமையன்றும், விதி எண் 176-ன் கீழ் மாநிலங்களவையில் செவ்வாயன்றும் விவாதம் நடைபெறும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. விலைவாசி உயர்வு பற்றிய இந்த விவா தத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள் விக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் பதிலளிப்பார் என்று கூறப்படுகிறது.