இராஜபாளையம், ஜூன் 7 - தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளனத்தின் 6 ஆவது மாநில மாநாடு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமையன்று பேரணியுடன் துவங்கியது. பேரணிக்கு சம்மேளனத்தின் மாநில தலைவர் பி.சுந்தரம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் எம். அசோகன் பேரணியை துவக்கி வைத்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தையல் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். ஐடா ஹெலன், துணைப் பொதுச் செயலாளர் சி.மாரிக்கண்ணு, பொருளாளர் ஆர்.மாலதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.