states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவின் விசா காலத்தை சிங்கப்பூர் அரசு ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை மேலும் 14 நாட்கள் நீட்டித்துள்ளது. கோத்தபய சார்பில் அளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் அடிப் படையில் பயண அனு மதி நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனி டையே இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்வதற்கான தடை ஆகஸ்ட் 2 வரை நீட்டி க்கப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவும் வெளிநாடு செல்ல ஆகஸ்ட் 2ம் தேதி வரை தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
  2. நாடாளுமன்றத்தில் மாநி லங்களவை உறுப்பினர் அபிர் ரஞ்சன்தாஸ் எழுப்பிய கேள்விக்கு, கொரோனாவால் உயிரி ழந்த முன்களப் பணி யாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் விவ ரங்கள் ஒன்றிய அரசி டம் இல்லை. ஜூலை 23 வரை மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணி யாளர்கள் உள்பட 5,25,997 பேர் பலியாகி யுள்ளனர் என்று ஒன்றிய சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  3. மத்தியப்பிரதேச மாநிலம் ஷஜபூர் மாவட்டம் பவாலியஹெடி கிரா மத்தில் வசிக்கும் பட்டி யலின சமூகத்தை சேர்ந்த  16 வயது சிறுமியை பக்கத்து கிராமத்தை சேர்ந்த மாற்று சமூ கத்தை சேர்ந்த சிலர்   பள்ளிக்கு செல்லக் கூடாது என கூறி மிரட்டி யுள்ளனர். மேலும் சிறு மியின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். சிறுமியை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்து, சிறுமியில் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய 7 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர்.
  4. தேசிய புலிகள் பாதுகாப்பு  ஆணையம் வெளியிட்டி ருக்கும் புள்ளிவிவரப்படி, 2022 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 75 புலிகள் இறந்துள்ளன. கடந்த பத்து ஆண்டு களில் புலிகளின் இறப்பு என்பது மெல்ல அதி கரித்தே வந்துள்ளது. 6 புலிகள் சரணாலயங் களைக் கொண்டிருக்கும் மத்தியப் பிரதேசத்தில், இக்காலக்கட்டத்தில் 270 புலிகள் இறந்துள்ளன. இதற்கடுத்த இடத்தில் மகாராஷ்டிரமும் (183), கர்நாடகமும் (150) உள்ளன. தமிழகத்தில் 66 புலிகள் இறந்துள்ளன.
  5. சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசார ணைக்கு எதிர்ப்பு தெரி வித்து தில்லி விஜய் செள க்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை  காங்கிரஸ் எம்.பி.க்கள்  பேரணியில் ஈடுபட்ட னர். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்களை தடுத்து நிறுத்திய தில்லி காவல் துறையினர் அவர்களை கைது செய்து தடுப்புக் காவல் மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
  6. சீனாவின் ஒரு பகுதியாகக் கருதப்படும் தைவானுக்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் நானோ பெலோசி பயணம் செய்யவிருக்கிறார். இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டால், சில நடவடிக்கைகள் சீனா எடுக்க வேண்டியது வரும் என்று சீனாவின் பாதுகாப்புத்துறை துணையமைச்சர் டான் கெபேய் எச்சரித்துள்ளார். தைவான் சீனாவின் ஒரு பகுதி என்ற அமெரிக்காவின் உறுதிமொழியை கடைப்பிடிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
  7. கொலம்பியாவின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பிரான்சியா மார்க்குஸ் மற்றும் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா ஆகிய இருவரும் சந்தித்துப் பேசியுள்ளார்கள். ஆகஸ்டு 7 ஆம் தேதி பதவியேற்கவிருக்கும் பிரான்சியா, பிரேசில், சிலி, அர்ஜெண்டினா மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளின் முக்கியமான தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். இவர்களில் சிலியின் கேப்ரியல் போரிக் மற்றும் அர்ஜெண்டினாவின் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் ஆகிய இருவரும் அடங்குவர்.
  8. மின்சாரத்தை வர்த்தகம் செய்து கொள்வது மற்றும் நேபாளத்தின் நீர்மின் திட்டத்தில் வங்கதேசம் முதலீடு செய்வது ஆகியவை பற்றி இரு நாடுகளின் அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. ஜூன் மாதத்திலேயே நடைபெற வேண்டிய இந்தப் பேச்சுவார்த்தையைத் தள்ளி வைக்குமாறு வங்கதேசம் கேட்டுக் கொண்டது. ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயர்மட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்கவிருக்கிறார்கள்.