states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் இரண் டாவது பெரிய பள்ளி மாவட்டமான லாஸ் ஏஞ் சல்ஸில் 30% சம்பள உயர்வு கேட்டு ஆசிரி யர்கள், கல்வி சார்ந்த  ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸின் 90% பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 4.2 லட்சம் மாணவர்கள் கடந்த 3  நாட்களாக அறிவிக்கப் படாத விடுமுறையுடன் வீட்டில் உள்ளனர்.

இமாச்சலப் பிரதேச அரசு  விதிக்கும் நீர் செஸ் வரி (மலைப்பகுதி நீர் உற் பத்தி செய்யப்படும் ஹைடல் மின்சாரத் திற்காக) சட்டவிரோத மானது எனக் கூறி பஞ்சாப் அரசு சட்டப்பேர வையில் தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.

அதானி கடந்த ஆண்டில் ஒவ்வொரு வாரமும் ரூ.3,000 கோடியை இழந்துள்ள நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை யால் அதானியின் சொத்து உச்சத்தில் இருந்து 60%க்கும் மேல் குறைந்துவிட்டது என ஹுருன் குளோபல் அறி க்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டை தொட ர்ந்து கேரளாவிலும் கொரோனா பாதிப்பு எண் ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலை யில், அனைத்து மாவட்டங் களும் உஷார் நிலையில் இருக்க அம்மாநில சுகா தாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கறிஞர் ஜான் சத்தி யனை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக நிய மிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஜான் சத்தியனை நீதிபதி யாக நியமிக்க கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்., 16-இல் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை த்தது. இதனை ஒன்றிய அரசு கண்டுகொள்ளாத நிலையில், மீண்டும் 2023 ஜனவரி 17-இல்  வலியுறுத்தியது. தற் போது கடும் அதிருப்தி யுடன் உச்சநீதிமன்ற கொலீஜியம் ஜான் சத்தி யனை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக வலி யுறுத்தியுள்ளது.

10 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 20க்கும் மேற்பட்டோர் வேலை செய்துள்ளனர் என்று காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து அமை ச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் அருகே குருவிமலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையின் உரிமையாளரும், அதி முக பிரமுகருமான நரேந் திரன் கைது செய்யப் பட்டார். நரேந்திரன் 20 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 60 ஆண்டுகள் பழமையான போர்டோ பொலிவார் மரைன் மியூசியம் கடலில் மூழ்கியது.

உலகச் செய்திகள்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தென் கொரியாவின் ஏற்றுமதியில் 17.4 விழுக்காடு அளவிற்கு சரிவு ஏற்பட்டி ருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்தே ஏற்றுமதியில் சரிவு இருந்து வந்தது. குறிப்பாக மார்ச் 1 முதல் 20 ஆம் தேதி  வரையிலான நாட்களில் கடுமையான நெருக்கடி இருந்திருக்கிறது. சில முக்கியமான பொருட்களின் ஏற்றுமதியில் 44.7 விழுக்காடு அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

சிரியாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான அலிப்போ மீது இஸ்ரேலியத் தாக்குதல்கள் நடந்துள்ளன.  கடந்த சில வாரங்களில் இது இரண்டாவது தாக்குதலாகும். சிறிய அள விலான சேதங்கள்தான் ஏற்பட்டுள்ளன என்றாலும், விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிரிய அரசு, ஏராளமான ஏவுகணை களை எதிரிகள் வீசினார்கள் என்று கூறியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து நிலவும் வேலை யின்மை விகிதம் மற்றும் கடுமையான மின்வெட்டு ஆகியவற்றிற்கு எதிராக தென் ஆப்பிரிக்காவில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாகவே தொடர்ந்து வேலையின்மை விகிதம் 37.4 விழுக்காடாக இருக்கிறது. போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் நூற்றுக்கணக்கானோர் போராடிய காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.