மே 10ல் வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடி, ஏப். 11 தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் 8.4.2023 அன்று தூத்துக்குடி யில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம்.பி.முருகையன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சு.சங்கரலிங்கம் கடந்த காலநடவடிக்கைகள் மற்றும் கோரிக்கைகள் நிலை குறித்து எடுத்துரைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலு வலர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 10.5.2023 முதல் சென்னை வருவாய் நிருவாக ஆணையர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான வருவாய்த் துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் நிறை வேறும் வரை அனைவரும் ஆணை யரக வளாகத்திலேயே (சேப்பாக்கம் - எழிலகம்) இரவு பகலாக காத்திருப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
4 ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலை உடன் வெளியிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தில் பணியிறக்கத்தை தவிர்க்க, பதவி உயர்வு பாதுகாப்பு அரசாணையை உடன் வெளியிட வேண்டும். பேரிடர் காலங்களில் மக்களின் உயிரைக் காக்கக்கூடிய துறையான பேரிடர் மேலாண்மைத்துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி யிடங்கள் கலைக்கப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் இப்பணி யிடங்களை வழங்கிட வேண்டும். 16.8.2022 அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய காலக்கெடுவிற்குள் ஆணைகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது மேலும் காலதாமதம் செய்யா மல் உடன் ஆணைகள் வெளியிட முதலமைச்சரை இக்கூட்டம் கேட்டுக் கொண்டது.
கேள்வி நேரத்திலிருந்து...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாயன்று (ஏப்.11) நடந்த கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச் சர்கள் அளித்த பதில் வருமாறு.
சித்திரை திருவிழாவுக்கு மதுரை தயார்!
மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக் கம். அந்த திருவிழாவின் போது கள்ளழ கர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு தேவைப்படும் தண்ணீரை திறந்து விடவும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரவும் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, “மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவை ஒட்டி கள்ளழ கர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு தேவைப்படும் தண்ணீரை திறந்து விடவும் மக்களுக்கு உரிய பாது காப்புகள் செய்து கொடுக்கவும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன என்று தெரி வித்தார்.
திருவாரூர் தேரோடும் வீதியில் புதைவட மின் கம்பிகள்!
திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட திருவாரூர் நகரத்தில் தேரோடும் நான்கு வீதிகளின் மேல் செல்லும் மின்சார கம்பிகளை புதை மின் வடங்களாக மாற்றி அமைக்க அரசு முன்வருமா? என்று திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “திருவாரூர் தியாகராஜர் தேரோடும் இரண்டு வீதிகளில் முதல் கட்டமாக சுமார் 6 கோடியே 77 லட்சத்தில் மின் கம்பிகளை புதைமின் வட்டங்களாக மாற்றி அமைக்க முதலமைச்சர் அனு மதி வழங்கியுள்ளதால் விரைவில் அந்த பணிகள் துவங்கும்” என்றார். தொடர்ந்து உறுப்பினர்கள் எழுப்பிய துணை கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “திருவாரூரில் 3 துணை மின் நிலையங்களும், 240 மின்மாற்றி களும் அமைக்கப்படும் என்றும், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி யில் சீரான மின்சாரத்தை வழங்கு வதற்காக துணை மின் நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்றும், கோயில் மாநகரமான காஞ்சிபுரத்தில் பட்டு கைத் தறி நெசவுத் தொழிலுக்கு 10 ஏக்கர் நிலப் பரப்பில் 110 கிலோ வாட் துணைமின் நிலையம் ஒன்றும், மேலே செல்லும் மின் கம்பிகளை முன்னுரிமை அடிப் படையில் புதை மின் வடங்களாக மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரி வித்தார்.
அன்னதான திட்டத்திற்காக ரூ.105 கோடி!
தமிழ்நாடு முழுவதும் எத்தனை கோவில்களில் அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது இதில் முழு நேரமாக அன்னதான திட்டம் வழங்கும் கோயில்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்று சென்னை திருவிக நகர் தொகுதி திமுக உறுப்பினர் சிவக் குமார் (எ) தாயகம் கவி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “தமிழ்நாடு முழுவதும் தற்போது 764 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் அதில் 8 கோவில்களில் முழு நேரம் அன்னதானம் வழங்கப்படுகிறது என்றார்.
கலாஷேத்ராவில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
சென்னை, ஏப். 11 - கலாஷேத்ராவில் மாநில மனித உரிமைகள் ஆணையம் சார்பில் செவ்வாயன்று (ஏப்.11) விசாரணை நடைபெற்றது. ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா, நுண்கலை கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் அரிபத்மன் உள்ளிட்டு 4 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள னர். இதனை கண்டித்து மாணவர் கள் நடத்திய போராட்டத்தையடுத்து, தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. பேராசிரியர் அரிபத்மன் கைது செய்யப்பட்டார். இன்னும் 3 பேர் கைது செய்யப்படாமல் உள்ள னர். இந்நிலையில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், மாணவர்களை அச்சுறுத் தக் கூடாது என திங்களன்று (ஏப்.10) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் கலாஷேத்ரா முன்பு போராட்டம் நடத்தின. இதையடுத்து இந்த வழக்கை தாமாக முன்வந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியது.
இந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கையை ஆறு வாரத்திற்குள் தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டது. மாணவர்களுக்கு 12ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுவதால் விசாரணையை 13ஆம் தேதி வைத்துக் கொள்ளலாம் என்று கலா ஷேத்ரா நிர்வாகம் கோரிக்கை வைத்தது. தேர்வுகள் முடிந்த பின் விசா ரணை நடத்த கோருவது, வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி என்று கூறி, ஆணையம் அந்த கோரிக்கையை நிராகரித்தது. இதையடுத்து மாநில மனித உரிமைகள் ஆணைய காவல் துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில், உதவி கண்காணிப் பாளர்கள் குமார், சுந்தரேசன், காவல்துறை ஆய்வாளர் ரவிக்குமார், பெண் உதவி ஆய்வாளர் தங்கமணி ஆகிய 5 பேர் அடங்கிய குழு, கலா ஷேத்ராவில் நேரடியாக விசாரணை நடத்தியது. கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்கு நர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் உள்ளிட்ட 6 பேரிடம், சுமார் 2 மணி நேரம் ஆணைய அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது. இன்றும் விசாரணை இதனைத் தொடர்ந்து, தேர்வு முடிந்த பின்பு புதனன்று (ஏப். 12) பிற்பகலில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்த இருப்பதாக மாநில மனித உரிமைகள் ஆணைய காவல்துறையினர் தெரி வித்துள்ளனர்.