சென்னை,ஏப்.7- மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசு சட்டம் இயற்றி யது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக் கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கர வர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், பொருளா தாரம், கட்டமைப்பு சமநிலையற்ற நிலை என அனைத்து அம்சங்க ளையும் ஆராய்ந்து நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் அடிப்படை யிலேயே இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்தார். உயர் கல்வித்துறை சார்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது நியாய மானது எனவும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது எனவும் அதன் அடிப்படையில் பின் தங்கிய மாண வர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்தார். மார்ச் 17 அன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இந்நிலையில் இந்த வழக்கில் ஏப்ரல் 7 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பில், மருத்துவ மாணவர் சேர்க்கை யில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் இந்த இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்க வேண்டுமா என்பது குறித்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.