states

வாலிபர் சங்க அகில இந்திய மாநாடு

கொல்கத்தா, மே 12- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  11ஆவது அகில இந்திய மாநாடு வியாழ னன்று (மே 12) கொல்கத்தா ராணி ராஷ்மணி சாலையில் பல்லாயிரக்கணக்கான இளை ஞர்கள் பங்கேற்ற பேரணியுடன் தொடங்கி யது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு, கொல்கத்தா மாநகரில் மீண்டும் வாலிபர் சங்க அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. ஹவுரா மற்றும் சியால்டா ரயில் நிலையங்களில் இருந்து இளைஞர் படையின் வெண்கொடி அணிவகுப்புகள் நடைபெற்றன. பொதுக் கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி துவக்கி வைத்தார். சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் தலைமை தாங்கினார்.     மேற்குவங்கத்தில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு நடந்த கிளர்ச்சியின் போது  காவல்துறையின் மிருகத்தனமான தாக்கு தலில் கொல்லப்பட்ட சய்தூல் இஸ்லாம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள  வாலிபர் சங்கத் தியாகிகளின் வீடு களில் இருந்து கொண்டுவரப்பட்ட கொடிகள்  பொதுமாநாட்டு நகரத்தில் பறக்கவிடப் பட்டன. சால்ட் லேக் கிழக்கு மண்டல கலாச்சார மையத்தில் அமைக்கப்பட்டுள்ள டியாகோ மாரடோனா நகரில் வெள்ளியன்று காலை 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. பத்திரிகையாளர் சசிகுமார் பிரதிநிதிகள் மாநாட்டை துவக்கி வைக்கிறார். மாநாட்டு நகரில் மூன்று நாட்களும் பல்வேறு இடங்களில் கலைநிகழ்ச்சிகள்,  கருத்தரங்குகள், புத்தகம்-வரலாறு-திரைப் படத் திரையிடல் ஆகியவை நடைபெறும். கருத்தரங்கில் கேரள சட்டசபை சபாநாயகர் எம்.பி.ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை களின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள் கின்றனர்.