states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வெறும் 168 எலிகளைப் பிடிக்க ரயில்வே துறை ரூ.69 லட்சம் செலவிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் மீது குறியாக உள்ள அம லாக்கத்துறை, சிபிஐ எங்கே சென்றது எனத் தெரிய வில்லை என ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்கத்தை வலி யுறுத்தும் வகையில்  இந்துக்களின் வீடுகளுக்கே சென்று கதவைத் தட்டி விநாயகர் சிலை மற்றும்  பூஜை பொருட்களை வழங்கினர் இஸ்லாமியர்கள்.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் உள்ள சிவன் கோவிலில் வெள்ளியன்று மதகுரு ஒருவருடன் சேர்ந்து தொழுகை செய்த 38 வயது பெண் மற்றும் அவரது மகளை போலீசார் கைது செய்தனர். கேசர்பூர் கிராமத் தலைவரின் கணவர் பிரேம் சிங் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தள தலை வருமான நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா  மேத்தா (80), வயது முதிர்வின் காரணமாக தில்லி யில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவர் ஓர் ஆவணப் பட இயக்குநர் ஆவார்.

சமீபகாலமாக உடற்பயிற்சி கூடத்தில் மார டைப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும்  நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் காஜியா பாத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் வைக்கப்பட்டுள்ள டிரெட்மில்லில் (ஓட்டப்பயிற்சி இயந்திரம்) பயிற்சி மேற்கொண்ட இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

எதிர்க்கட்சியினரை குறிவைத்து பழிவாங்கும் கருவியாக அமலாக்கத்துறை மாற்றப்பட்டுள்  ளது. அதுவும் “இந்தியா” கூட்டணியை கண்டு  பாஜக மிரண்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை யின் நடவடிக்கை வேகமெடுத்துள்ளது என அம லாக்கத்துறை சம்மனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த பின்பு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறினார்.

சென்னை ஆலந்தூரில் சிஐஎஸ்எப் உதவி ஆய்வாளராக உள்ள உத்தரப்பிர தேசத்தைச் சேர்ந்த குல்பீர் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4.39 லட்சம் நூதன முறை யில் திருடப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் அவருடன் பணியாற்றும் காவலர் வினோத்குமாரை தேடி பரங்கிமலை போலீசார் காஷ்மீர் விரைந்துள்ளனர்.