states

கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்

மாமல்லபுரம், மே 22- கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து விழிப்போடு இருக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை  முதன்மைச் செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன்  கூறியுள்ளார். மாமல்லபுரத்தில் செய்தியாள ர்களிடம் பேசுகையில், சுகாதாரத் துறை யில் மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இவர்களின் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்களுக்கு  வேலை வாய்ப்பு கிடைக் கிறது.  தனியார் உற்பத்திசெய்யப்படும் மருந்துகள் விலை அதிகமாக இருப்பதற்கு உற்பத்தி  செலவினங்கள் அதிகமாக இருப்பதே காரணம், மேலும் மூலப் பொருட்கள் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வருவதா லும் மருந்துகளின் விலை அதிக ரிக்க காரணமாக உள்ளது. மருந்து களின் மூலப் பொருட்களை உள்நாட்டில் தயாரிக்கும் போது மருந்துகளின் விலை கணிசமாக குறையும். கூட்டமைப்பின் சார்பில் மார்க்கெட்டிங் லைசென்ஸ் வழங்க  வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஒன்றிய அரசின் சட்டங்கள் இருப்பதல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய கொரோனா தொற்று

 பிஏ4 வகை தொற்றால் பாதிக்கப் பட்டவர் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது அவர்கள் தற்போது நலமாக உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் பேருக்கு ஆய்வு செய்தால் 3 பேருக்கு தொற்று கண்ட றியப்படுகின்றது. ஆனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்  பகுதியில் ஆயிரம் பேருக்கு ஆய்வு செய்தால் 15 பேருக்கு தொற்று கண்டறியப் படுகிறது. சென்னையில் அதிக அளவில் பொதுமக்களின் நெரிசல் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பருவகால நோய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது. அரசு மருத்துவ மனைகளில் அனைத்து நோய்களுக்கும் மருந்துகள் இலவசமாக  வழங்கப்பட்டு வருகின் றது. இதை பொதுமக்கள் உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செங்கல்பட்டில் ஒன்றிய அரசு சார்பில் அனைத்து வசதிகளுடன் அமை க்கப்பட்டுள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசு ஏற்று நடத்த அரசு தயாராக உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகின்றார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் 3 முறை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச் சரை நேரில் சந்தித்து நீங்கள் நடத்து ங்கள் அல்லது வேறு யார் மூலமாவது நடத்துங்கள் அல்லது எங்களிடம் கொடுங்கள் என வலியுறுத்தியுள்ளார் என்றும் அவர் கூறினார்.