சென்னை,ஏப்.11- நீட் தேர்வின் மறு வடிவமாகவே இளங்க ளைப் படிப்புக்களுக்கு கொண்டுவரப்படும் பொது நுழைவுத் தேர்வு என்று சட்டமன்ற கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். பொது நுழைவுத் தேர்வை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்தை சட்டமன்ற கட்சித் தலைவர்கள் ஆதரித்தும் வரவேற்றும் பேசினர். எம்.சின்னதுரை சிபிஎம் : 2022-23 ஆம் கல்வியாண்டில் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது ஆபத்தானதாகும். மாநில பல்கலைக் கழங்கள், நிகர் நிலைப் பல்கலைக் கழங்கள் விரும்பினால் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கும் ஆபத்தானதாகும்.
விளிம்பு நிலையில் ஏழை,எளிய மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான தகுதி என்பதையே இழந்துவிடுவார்கள். இத்தகைய முயற்சிகளை, மோசமான தலையீடுகளை ஒன்றிய அரசு முயற்சிக்கிறபோதெல் லாம் நாட்டிற்கே முன்மாதிரியாக நமது சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது மிகசிறப்பானது என்றும் இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமனதுடன் ஆதரிக்கிறது. கேரள மாநிலம் கண்ணுரில் நடந்த சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற நமது முதல்வர் பேசியது இந்தியாவின் மதச்சார் பின்மையின் அடையாளமாக அமைந்திருக்கி றது. நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.
கே.பி. அன்பழகன் அதிமுக: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போராடி வரும் நிலையில் இளங்கலை படிப்புகளில் பொது நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு அறிவித் திருப்பது மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதை அனுமதித்துவிட்டால் ஏழை-எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளா குவார்கள். எனவே, முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்போம். செல்வபெருந்தகை காங்.: ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்க்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றிவிடும். ஒன்றிய அரசு நடத்தும் பள்ளிகளை போன்ற சிறப்பு பள்ளிகள் கிடையாது மாநில அரசின் பள்ளிகள். எனவே, நாட்டிகே வழிக்காட்டும் மாநிலமாக நமது தமிழ்நாடும் முதலமைச்சரும் இருக்கிறார். ஜி.கே.மணி பாமக: முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் தீர்மானம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மாணவர்களின் நலன்களை யும் பாதுகாப்பதாகும். இப்போது எதிர்க்க வில்லை என்றால், ஏழைகளுக்கு கல்வி எட்டாக் கனியாக மாறிவிடும். அடித்தட்டு மக்களுக்கும் தடையாக அமைந்துவிடும்.
நீங்கள் இப்படித்தான் ஆரம்பிப்பீர்கள் நயினார் நாகேந்திரன் பாஜக: நாடு முழுவதும் ஒன்றிய அரசின்கீழ் 49 பல்கலைக்கழ கங்கள் இயங்கி வருகிறது. அதில் ஒரேயொரு பல்கலைக்கழகம் முதல்வரின் ஊரான திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு 27 துறைகள் உள்ள அந்த பல்கலைக்கழகத்தில் 2,515 மாணவர்கள் சேர்க்கையில் உள்ளனர். அதற்கான நுழைவுத் தேர்வெல்லாம் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது. கேரள மாநிலம் காசர்கோடில் ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது. கம்யூனிஸ்ட் ஆளுகின்ற அந்த மாநிலத்தில் இதுவரை அந்த பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருந்தாலும், முதல்வர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் கடைசி யிலேயே தெளிவாக இருக்கிறது, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பி னால் இந்த நுழைவுத் தேர்வை சேர்த்துக் கொள்ளலாம் என உள்ளது.
அமைச்சர் பொன்முடி: நீட் வரும்போதும் இப்படித்தான் சொன்னார்கள். தமிழகம் விரும்பினால் கொண்டு வரலாம் என்று சொன்னார்கள். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி நீட் தமிழகத்துக்குள் வருவதை தடுத்துக் கொண்டிருந்தார். இப்போது நீங்கள் இப்படித்தான் ஆரம்பிப்பீர்கள், விரும்பினால் என்று ஆரம்பித்து, பிறகு புதிய கல்விக் கொள்கை அப்படியென்று கூறி கட்டாயமாக்கு வீர்கள். எனவேதான் தமிழக முதல்வர் மிக தெளிவாக இந்த துறையின் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார். அனைத்து மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும் என்ற உணர்வோடு அவர் உருவாக்கியிருக்கிறார். இது கேரளா மட்டு மல்ல, இந்தியாவில் இருக்கிற, பாஜக இருக்கிற மாநிலங்களைத் தவிர, ஆரம்பத்தில் 9 மத்தியப் பல்கலைக் கழகங்களில் நடைபெற்று வந்த இந்த தேர்வு, தற்போது 54 பல்கலைக் கழகங்க ளில் நடத்தப்படுகிறது. எனவே, சட்டப்பேரவை உறுப்பினர் கூறுவது தவறான கருத்து. டி.ராமச்சந்திரன்(சிபிஐ), சிந்தனை செல்வன்(விசிக), சதன்திருமலைகுமார் (மதிமுக), ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோரும் பேசினர்.