states

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் கவலைப்படவில்லை

சென்னை,ஆக.13- மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கவலை படவில்லை என்று திமுக மாநிலங்க ளவை உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி கூறினார். சென்னை அண்ணா அறிவால யத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; மணிப்பூர் மாநிலத்தில் 100 நாட்க ளுக்கு மேலாக பதட்டம் நிலவு கிறது. 100-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சம் பேர் இடம் பெயர்ந்து பதுங்கி வாழ்கின்ற னர். இப்போது ஒரு தகவல் வெளி வந்துள்ளது. மணிப்பூரை சேர்ந்த 230 பேர் மியான்மர் காடுகளில் தவிக் கின்றனர். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் விளக்கம் தேவை என்பதே எதிர்க்கட்சிகளின் ஒரு மித்த கோரிக்கையாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி 2 நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசி உள்ளார். பெண்கள் அவமானப் படுத்தப்பட்டது பற்றி விளக்கம் அளிக்கவில்லை. மணிப்பூர் பிரச் சினை முடிந்து விட்டது போல நாடா ளுமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளிக்கிறது. மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி ஒருநாளும் கவலைப்படவில்லை. தி.மு.க.வை கண்டு பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா அச்சம் அடைந்துள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.