states

ரயில் நிலையங்களில் உணவு பண்டங்கள் விலை உயருகிறது

சென்னை, ஜன. 25 - ரயில் நிலையங்களில் விற்கப் படும் உணவுப் பொருட்களின் விலையை ரயில்வே நிர்வாகம் உயர்த்தியுள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காக முக்கிய ரயில் நிலைய சந்திப்புகள் மற்றும் ரயில் நிலையங்களில் உரிமம் பெற்ற தனியார் உணவு விற்பனை நிலையங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த உணவகங் களில் இட்லி, பரோட்டா, சப்பாத்தி, பொங்கல், தோசை, சாம்பார், தயிர், புளி, எலுமிச்சை, தேங்காய் சாதங் கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த உணவுப் பொருட்களின் விலை 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விலைவாசி உயர்வை அடிப்படையாக கொண்டு விலையை உயர்த்த உள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளது. டீ, காபி, குடிநீர் பாட்டில்கள் விலை உயராது என்றும், இவை நீங்க லாக மீதமுள்ள உணவுப் பொருட்க ளின் விலையை ஜன.16ஆம் தேதி உயர்த்தி ரயில்வே நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

அதன்படி சட்னி சாம்பாருடன் 2 இட்லி ரூ.13லிருந்து 20 ரூபாயாகவும், மசால் தோசை ரூ.16 லிருந்து 25 ரூபாயாகவும், மெது வடை, மசால் வடை, ரவை உப்புமா, ஆனியன் தோசை, ஊத்தப்பம், வெங்காய பக்கோடா ஆகிய வற்றின் விலை ரூ.17லிருந்து 30 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது. வெஜிடபிள் சாண்ட்விச், எலு மிச்சை சாதம் ஆகியவை ரூ.19 லிருந்து 30 ரூபாயாகவும், தக்காளி சாதம் ரூ.14லிருந்து 20 ரூபாயா கவும், பொங்கல் ரூ.16லிருந்து 25 ரூபாயாகவும், புளிசாதம் ரூ.21 லிருந்து 35 ரூபாயாகவும், தயிர் சாதம் ரூ.18லிருந்து 30 ரூபாயா கவும், தேங்காய்சாதம் ரூ.19லிருந்து 25 ரூபாயாகவும், சாம்பார் சாதம் ரூ.20லிருந்து 30 ரூபாயாகவும், சைவ குருமாவுடன் இரண்டு பரோட் டாக்கள் அல்லது நான்கு சப்பாத்தி கள் ரூ.29லிருந்து 45 ரூபாயாகவும் விலை உயர்கிறது. “ரயில் நிலைய கேட்டரிங் ஸ்டால் களில் உணவு வகைகளின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் விலைப்பட்டியல் இதுவரை தென்னக ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து ரயில் நிலையங்களுக்கு வந்து சேரவில்லை. எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்பட்ட விலைப் பட்டியல் வரும். வந்த வுடன் புதிய விலை உயர்வு அமல் படுத்தப்படும்” என்று அதிகாரி ஒரு வர் தெரிவித்துள்ளார்.