states

தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்: வாலிபரை எச்சரித்த காவல் துறை

சென்னை, ஆக.22- சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு திங்களன்று (ஆக.21)  காலை 6.30 மணிக்கு ஒரு  அழைப்பு வந்தது. அதில் பேசிய  நபர், சென்ட்ரல் ரயில் நிலத் தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வும், வெடிகுண்டு 8 மணிக்கு வெடிக்கும் எனவும் கூறிவிட்டு உடனே தொடர்பை துண்டித்தார். உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து சென்ட்ரல் ரயில்வே காவல்  துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து ரயில்வே காவல் துறையினர், பூக்கடை காவலர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடைமையை சோதனை செய்த னர். சோதனையின் முடிவில் வெடி குண்டு எதுவும் சிக்காததால் இது வெறும் புரளி எனத் தெரிய வந்தது. இதையடுத்து வெடி குண்டு மிரட்டல் விடுத்தவர் செல்போன் எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த நபர் சென்னை வியாசர்பாடி மல்லிகை பூ காலனி யைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராமலிங்கத்தின் மகன் மணிகண்டன் (21) என்பது தெரியவந்தது. அவர், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக கீழ்ப் பாக்கம் மனநல மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த நிலையில் மணிகண்டன்  வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. ஏற்கனவே, ஏப்ரல்  25 மற்றும் ஜூன் 21 ஆம் தேதி களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில், 3-வது முறையாக  வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே,  இதுபோன்ற சம்பவம் மீண்டும்  நடக்காமல் பார்த்துக் கொள்ளு மாறு மணிகண்டன் பெற்றோரிடம் கடுமையாக எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.