states

விசைத்தறி தொழிலாளர்கள் 9 ஆவது நாளாக வேலை நிறுத்தம்

தேனி,ஜன.10- திண்டுக்கல் தொழிலாளர் நல உதவி ஆணையர் நடத்திய பேச்சுவார்த்தை யில் தொடர்ந்து உரிமையாளர்கள் பிடி வாதம் பிடித்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் 9 ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் . தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட் டாரப் பகுதியில் உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், எஸ்.எஸ்.புரம், கொப்பையன்பட்டி ஆகிய பகுதிகளில் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலை நம்பி உள்ளனர். நெசவு செய்து வரும் தொழிலாளர்களுக்கு கடந்த  நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்து வரு கின்றனர் .நிலுவையும் ,50 சதவீத கூலி உயர்வும் வழங்க வேண்டும்.அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2 ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்த நிலையில் வட்டாட்சியர்  இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உரிமையாளர்கள்  ஊதிய ஒப்பந்தம் போட முன்வரவில்லை .திங்களன்று  திண்டுக்கல் தொழிலாளர் இணை ஆணையர்  முன்னிலையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் 5 சதம் உயர்த்தி தருவதாக உரிமையாளர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர் . இதனை தொழி லாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து 9 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கிறார்கள். வருகிற 13 ஆம் தேதி  ஆண்டி பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.