states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆஸ்கர் விருது பெற்ற “தி  எலிஃபண்ட்  விஸ்பரர்ஸ்” ஆவணப் படம் ஐந்து முதல் ஆறு வருடங்கள் ஆவணப் படுத்தப்பட்ட படமாகும். முக்கியமாக 450 மணி நேர காட்சிகள் எடிட்டிங் செய்யப்பட்ட பதிப்பு தான் 40 நிமிட ஆவ ணப்பட மாற்றப்பட்டுள் ளது என “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப் படத்தின் குழு கூறி யுள்ளது.

வரும் நாட்களில் நாட்டின் பெரும்பாலான பகுதி களில் கனமழை மற்றும்  ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பொது மக்கள் வீடுகளில் பாது காப்பாகவும், முடிந்தளவு பயணத்தை தவிர்க்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள பள்ளியில் மயங்கி விழுந்த 10 வயது சிறுவன் மர்மமான முறையில் இறந்தான். சிறுவன் இறந்து 2 மாதங்கள் ஆகியும் சாதாரண வழக்குப்பதிவு கூட செய்யாமல் இருக்கும் காவல்துறையின் அலட்சி யத்தை கண்டித்து பெற்றோர்கள் பள்ளி வளாகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மார்ச் 17-ஆம் தேதி முதல் நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறி வித்துள்ளது.

ஆவடி பத்திரப்பதிவு அலு வலர் மீது ஏராளமான புகார்கள் குவிந்ததால், புதனன்று ஆவடி பத்தி ரப்பதிவு, வட்டாச்சியர் அலுவலகங்களில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்), சிஆர் பிஎப், சிஐஎஸ்எப், அசாம் ரைபிள் ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய பாதுகாப்புப் படையில் 84,866 பணியிடங்கள் காலியாக உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரி வித்துள்ளது.

ஆருத்ரா கோல்டு நிறு வன மோசடி வழக்கு  தொடர்பாக 10,000 பேர் புகார் அளித்துள்ள நிலை யில், அந்நிறுவனத்தில் 2.2 கிலோ தங்கம், 18  கார்கள் பறிமுதல் செய்யப் பட்டு, மேலும் நிறுவன த்தின் 120 வங்கிக் கணக் குகளும் முடக்கப்பட்டுள் ளன. இதுபோக 89,000 பேரிடம் பணம் பெற்று  மோசடியில் ஈடுபட்டு ள்ள ஹிஜாவு நிறு வனத்தின் 162 வங்கிக் கணக்குகளும், சோத னையில் ரூ.3.34 கோடி பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. 

அமலாக்கத்துறை விசா ரணை சம்மனுக்கு தடை கோரி தெலுங்கானா முதல்வர்  சந்திரசேகர ராவ் மகளும் எம்பியுமான கவிதா தொடர்ந்த வழக் கை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன் றம் மறுத்துள்ளது.

உலகச் செய்திகள்

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள தீவு நாடான மடகாஸ்கரை முதலில் பிப்ரவரியிலும், பின்னர் மார்ச்சிலும் புயல் தாக்கியது. தொடர்ச்சியாக இரண்டு புயல்கள் என்பது இப்பகுதியில் நிகழ்ந்ததில்லை. ஆனால், எப்போதாவது நடக்கும் இது போன்ற தாக்குதல்களால் பெரும் அழிவு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு தாக்கிய புயல்களின் பாதிப்பில் இருந்து இன்னும் மடகாஸ்கர் மீளவில்லை. ஏராளமான விவசாய நிலங்களும், கட்ட மைப்புகளும் அழிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுரஸ், தைவானுடனான உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதி சியாமரோ காஸ்ட்ரோ இது குறித்து தெரிவித்துள்ளார். சீனாவுடனான உறவைப் புதுப்பித்துக் கொள்வதன் மூலம் தைவானுடனான உறவுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகிறார்கள். ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது சீனாவுடனான உறவுக்கு வழிவகுக்கப் போவதாக காஸ்ட்ரோ உறுதியளித்திருந்தார்.

பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுத் தலைவர்கள் கொடுத்த  பரிசுப் பொருட்களை விற்று விட்டதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்வதற்காக தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து  லாகூரில் உள்ள இம்ரான் கானின் வீட்டிற்குச் சென்ற காவல்துறை யை, அவருடைய ஆதரவாளர்கள் மறித்து வருகிறார்கள். இரண்டா வது நாளாக, கைது செய்ய இயலாமல் காவல்துறை வெளியில் காத்துக் கொண்டிருக்கிறது.