states

ஒமைக்ரான் பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது

புதுதில்லி, டிச.30- இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்துள் ளது. 22 மாநிலங்கள், யூனியன் பிரதே சங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. இதுவரை 320 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்தவரை தில்லியில் அதிகபட்ச மாக 263 பேருக்கும், மகாராஷ்டிராவில் 252, குஜராத்தில் 97, இராஜஸ்தானில் 69, கேரளாவில் 65, தெலுங்கானாவில் 62 பேருக்கும், தமிழகத்தில் 45 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. வியாழக்கிழமை காலை எட்டு மணி யுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,154பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகா தார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.  கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப் பட்டோர் 13,154 பேர்,  இதுவரை கொரோ னா பாதிக்கப்பட்டோர் 3,48,22,040 பேர், கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந் தோர் 7 ,486 பேர்,  இதுவரை குணமடை ந்தோர்  3,42,58,778.பேர் ஆவர்.

மக்கள் அச்சம் அடைய வேண்டாம் 

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.40 சதவீதம் என்றளவில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் உயிரி ழந்தோர்  268 பேர். கொரோனா மொத்த உயிரிழப்புகள் 4,80,860. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 82,402 பேர் ஆவர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் ஒரு லேசான தொற்று மற்றும் அதிகளவு ஆக்சிஜன் தேவை ப்படாது. அனைவரும் “ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துகளை சேமிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” தடுப்பூசி அல்லது இயற்கை நோய்த்தொற்றுகள் காரணமாக நம்மில் ஏராளமானோர் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள் ளோம். மக்கள் அச்சம் அடைய வேண்டாம்/ அதே நேரத்தில் மக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென  எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப்  குலேரியா தெரிவித்துள்ளார்.  கொரோனா தொற்றின் மூன்றாவது அலை மும்பையில் தொடங்கியுள்ளது என்று மகாராஷ்டிரா மாநில கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரி வியாழனன்று தெரிவித்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மாநிலத்தில் கொரோனா நிலைமை குறித்து இதே கருத்தை கூறியிருந்தார்.