states

மருத்துவ மாணவர்களுக்கு “பழைய உறுதிமொழியே தொடரும்”

சென்னை,மே 4- தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று (மே 4) கேள்வி நேரம் முடிந்ததும் மதுரை அரசு  மருத்துவக் கல்லூரியில் புதிதாக ஏற்கப்பட்ட உறுதி மொழி விவகாரம் குறித்து அரசின் கவனத் துக்கொண்டு வந்தனர். இதற்கு விளக்கம் அளித்து பேசிய அமைச்சர்  மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-  ஹிப்போகிரட்டிக் என்பவர் ஆங்கில மருத்துவத்தின் தந்தை என்று உலக அளவில் போற்றப்படுவர். அவரது மனித நேயத்தை போற்றும் வகையில்தான் அவரால் கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் மருத்துவம் பயிலும் முதலாமாண்டு மாணவர்கள் பல ஆண்டு காலமாக ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதி மொழியைத்தான் உலகம் முழுவதும் பெரும்  பகுதி நாடுகளில்  உறுதிமொழியாக தொடர்ந்து  எடுத்து வருகிறார்கள்.

 இந்த நிலையில்,தேசிய மருத்துவ ஆணை யம் ஹிப்போகிரட்டிக்கு மாற்றாக சமஸ்கிருத  ‘மகரிஷி சரக் சப்த்’ என்கிற புதிய உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று செய்தி வலை தளங்களில் பரவுகிறது. இதுபோன்ற சர்ச்சைக ளில் தேவையில்லாமல் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் புதிதாக எந்த ஒரு உறுதி  மொழியையும் ஏற்கவும் நீங்கள் உறுதுணையாக இருக்கக்கூடாது என்றும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் உடனடியாக, சுகாதாரத்துறையின் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி வைத்தார்.  ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதி மொழி என்பது மனித நேய அடிப்படையில் வந்திருப்பதா கும்.  ‘மகரிஷி சரக் சப்த்’ என்பது சமஸ்கிருதத்தி லிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் பட்டிருந்தாலும், எதிர்க்காலத்தில் இன்னும் பத்து  பதினைந்து ஆண்டுகள் கழித்து இதை நீங்கள் சமஸ்கிருதத்தில்தான் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தக்கூடும். அந்தமாதிரியான நிலை வரும்போது அது  தமிழ்நாட்டில் மிகப்பெரிய மொழி திணிப்பாக வந்துவிடும்.

பொதுவாக நாடு முழுவதும் சமஸ்கிருதம் பேசுபவர்கள் 24 ஆயிரம் பேர்தான்  இருக்கிறார்கள் என்று சொல்லப்படும் அந்த மொழி திணிப்பு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது முதல்வரின் விருப்பம். எனவே, தான்  சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து, தேசிய ஆணை யத்தின் நிலை குறித்து மார்ச் 21 அன்று மாநிலங் களவையில் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்த குடும்பநல துறை இணை அமைச்சர், “புதிய உறுதி மொழியை ஏற்றுக்கொள்ள வலி யுறுத்தவில்லை” என்றார். இந்த நிலையில், மதுரை மற்றும் ராமநாத புரம் அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதிய உறுதி மொழி ஏற்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும், இந்த புதிய முறை தமிழகத்தில் வந்துவிடக்கூடாது என்பதற்காக விசாரணை நடத்த தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.

அதன் தொடர்ச்சியாகதான் மதுரைக் கல்லூரி முதல்வர்  காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். சமஸ்கிருதத்தில் வந்துள்ள புதிய உறுதிமொழி என்பது மருத்துவத்துறையில் மிக மிக மோசன  விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, கணவனை இழந்த, பிரிந்த தனிப் பெண்களுக்கு மருத்துவம் பார்க்க மாட்டோம். செத்து மடியட்டும் என்று உறுதி மொழி எடுக்க வைக்கி றது. இதுமட்டுமல்ல, இதுவரைக்கும் இருந்து  வரும் மனித நேயத்தை அடியோடு குழி  தோண்டி புதைத்துவிடுகிறது. தீய வழிகளில், தவறான வழிகளில் செல்வோ ருக்கும் மருத்துவம் பார்க்க மாட்டோம். அவர்கள்  மரணமடைந்தாலும் கவலைப்பட தேவை யில்லை என்று புதிய உறுதியில் சொல்லப்பட்டி ருக்கிறது. இவை அனைத்தையும் இந்தியை திணிக்கும் ஒரு கூட்டம்தான் செய்ய முயல்கி றது. ஆனால், இதை மாநில அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. பழைய நடைமுறைதான் தொடரும். ‘ஹிப்போகிரட்டிக்’ முறையில்தான் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்பதை அரசு வலியுறுத்தும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.