states

ரயில்வேயில் 92 ஆயிரம் பணியிடங்கள் ரத்து

புதுதில்லி, மே 29- ரயில்வே துறையில் பணியிடங் களை ரத்து செய்துவிடுமாறு 17 மண்டல ரயில்வே நிர்வாகங் களுக்கு ரயில்வே வாரியம் உத்தர விட்டுள்ளது.  ரயில்வே உற்பத்திப் பிரிவுகள், சக்கர என்ஜின் தொழிற்சாலைகள், ரயில்பெட்டி தொழிற்சாலைகளிலும் இந்தப் பணியிடங்கள் வெட்டு செய்யப்படுகிறது. பாதுகாப்பு முக்கியத்துவம் இல்லாத பிரிவில் மொத்த பணியிடங்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 825 ஆகும். இவற்றில் 91 ஆயிரத்து 649 பணியிடங்கள் காலியாக உள்ளன.  இந்த பணியிடங்களை ரத்து செய்வது என ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இனிமேல் இந்தப்  பணியிடங்களில் புதிய நிய மனங்கள் இருக்காது. இது குறித்து காங்கிரஸ் தலைமை  செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவே கூறுகையில், “வேலையில்லா திண்டாட்டம் 45 வருட சாதனையை முறியடித்துள் ளது.  முன்பு கோடிக்கணக்கானோ ருக்கு வேலை வாய்ப்பு நம்பிக்கை  கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது ரயில்வேயில் 50 சதவீத வேலை வாய்ப்புகள் எப்போதும் இனி இல்லை என்றாகிவிட்டது. 91 ஆயிரத்து 649 பணியிடங்களில் இனி ஒரு போதும் நியமனங்கள் கிடையாது எனக் கூறியுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் 12.5 கோடி பேர் வேலையை இழந்துள்ள நிலையில் தற்போது சுமார் ஒரு  லட்சம் பணியிடங்கள் இனி எப்போதும் நிரப்பப்படாது என  அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.