states

மாணவர் நிரந்தர நீக்கம் குறித்த பேச்சை பள்ளிக் கல்வி அமைச்சர் திரும்பப்பெற வேண்டும்

சென்னை,மே 10- ‘மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால் மாற்று சான்றிதழ்களில் என்ன காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு, பள்ளியி லிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதை இந்திய மாணவர் சங்கம் திரும்பப்பெற வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர்  வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக பள்ளிகளில் மாணவர்கள் சிலர் கட்டுப்பாடின்றி நடப்பதாக கடந்த சில நாட்களாக காணொலி காட்சிகள் வெளி வருகின்றன. கண்ணியம் குறைவாக நடக்கும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோ சனைகள் வழங்கப்பட வேண்டும் என மாண வர் சங்கம் உள்ளிட்ட கல்வியாளர்கள், உள வியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக சட்டசபை யில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில் ,  மாணவர் கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ,  மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், மாற்றுச்சான்றிதழிலும் (டி.சி), நன்ன டத்தை சான்றிதழிலும் என்ன காரணத்துக் காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளி யில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படு வார்கள். மாணவர்கள் பள்ளிக்கு கைப்பேசி கொண்டு வருவது முற்றிலும் தடுக்கப் படும்” என்று தெரிவித்திருந்தார்.

மாணவர்களை தண்டனைக்கு உள் ளாக்கும் வகையில் மாற்று சான்றிதழ் வழங்குவதும் அதில் அவர்களின் நடத்தை குறித்து தெரிவிக்கப்படும் என்பதும் ஏற்புடை யதல்ல. பெருந்தொற்று காலத்தில் ஏற் பட்டுள்ள கற்றல் இடைவெளி, குடும்ப  சூழல், சமூக நெருக்கடிகளே மாணவர்களின் நடத்தையில் பெரும் பங்கு பிரதிபலிக்கிறது.  சமூகத்தில் குற்றங்களை குறைக்க கல்வி, வேலைவாய்ப்பு எவ்வளவு அவசியமோ, அது போலவே கல்வி நிலையத்தில் மாண வர்களின் நடத்தை மேம்பட அவர்களின் பன்முக திறன் வளர்ப்பும், மாணவர்களும் கல்விச் சூழல் குறித்து ஜனநாயகப்பூர்வமாக முடிவெடுக்கும்  உரிமையும் அவசியமா கிறது. கைபேசி கொண்டு வரக்கூடாது போன்ற சில கட்டுப்பாடுகள்  அவசியமா னதாக இருப்பினும் மாற்று சான்றிதழ் கொடுப்பது குறித்த அமைச்சரின் பேச்சு ஏற்புடையதாக இல்லை. எனவே தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் இது குறித்த  அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.