புதுதில்லி, மே 20- தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரியும், பராமரிப்பு பணி களை மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இவ் வழக்கு வெள்ளியன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப் போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ஸ்டெர்லைட் ஆலை பரா மரிப்பு தொடர்பான இடைக் கால மனுவை உடனடியாக விசாரித்து, அவசர நிவார ணங்களை வழங்க வேண்டும். அப்போதுதான் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற் கொள்ள முடியும் என தெரி வித்தார். இதையடுத்து நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை பரா மரிப்பு விவகாரத்தில் இடைக் கால மனு மீது எவ்வித நிவார ணமும் தற்போது வழங்க முடி யாது. அதேபோல் ஆலை தொடர்பான விஷயத்தில் தற் போதைய நிலையே தொட ரும் என உத்தரவிட்டனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலை தொடர் பான இடைக்கால மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண் டும் எனக் கூறி, வழக்கு விசார ணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.