2023 டிசம்பர் 17-18 ஆகிய தேதிகளில் தென் மாவட் டங்களில் வரலாறு காணாத மழை ஒரே நாளில் 95 சென்டிமீட்டர் என்ற அள வில் கனமழை பெய்தது. கனமழையால் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங் களான நெல்லை, தென்காசி, கன்னியா குமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மேற்கு தொடர்ச்சி பொதிகை மலை யில் பல்வேறு ஆறுகளையும் அருவி களையும், கிளை ஆறுகளையும் இணை த்துக் கொண்டு சுமார் 70 மைல் தூரத்திற்கு ஆறாக வந்து தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல் சங்குமுகம் வரையில் கடலில் இணையும் தாமிரபரணியில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் மழை வெள்ள நீர் வெளியேறியது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையையும் விவசாயத்திற்கு தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்து வந்த தாமிரபரணி ஆறு, குளங்கள், ஏரிகளும் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட ஏழு அணைக்கட்டுகள் அனைத்தும் நிரம்பி மறுகால் பாய்ந்து கரைகள் காணாமல் போவதும் இந்த மழைவெள்ளத்தில் நாம் கண்டது.
உடமைகளை இழந்த மக்கள்
வீடுகளுக்குள் ஏழடி உயரத்திற்கு மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் உயரமான கட்டிடங்கள், பள்ளிக்கூடங் கள், கோயில், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள், வணிக வளாகங்கள் மற்றும் மரங்களில் ஏறி என தஞ்சம் அடைந்து தங்களது உயிர்களை பாதுகாத்துக் கொண்டனர்.
தங்கள் உடமைகள் அனை த்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு நிராயுதபாணியாக பாதிக்கப்பட்ட மக்கள் இருந்ததையும் காணமுடிந்தது. ஏரல், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர் உள்ளிட்ட பல நகரப் பகுதிகளில் சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை மழை வெள்ளம் புகுந்ததால் பல கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்து பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
பசியோடு இருந்த மக்கள்
டிசம்பர் 18 தாமிரபரணி நதியோரம் ஆற்று ஓரங்களில் குடியிருப்பவர்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டுமென மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் மண்டபம், பள்ளிக்கூடம், கட்டிடங்கள் தங்குவதற்கு இடமில்லாமல் சாலைகளில் குடும்பமாக செல்ல வேண்டிய நிலையும் இருந்தது. இரவில் உணவு உண்டால் பாத்ரூம் போக வேண்டி இருக்கும், பாத்ரூம் போக இடமில்லாமல் உணவு உட்கொள்ளா மல், பசியோடும் வாழ்ந்த மக்களை முகாம்களில் நாம் பார்த்தோம்.
வீடுகளுக்கும் செல்ல முடியாமல் இருக்கும் இடத்திற்கு உணவுப் பொருள் கள் கிடைக்காமல் டிசம்பர் 22 ஆம் தேதி வரையிலும் மக்கள் கடுமையாக சிரமப் பட்டு வந்த நிலையில், தூத்துக்குடி புற நகர் முத்தையாபுரம் வடக்கு தெரு, முத்தையாபுரம் தோப்பு தெரு, முள்ளக் காடு, தங்கமணி நகர், பழைய காயல், மஞ்சள் நீர் காயல் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிஐடியு சிபிஎம் தோழர்கள் இணைந்து தண்ணீர் மற்றும் உணவு பொருள்களுக்காக மறி யல் போராட்டம் நடத்த வேண்டிய நிலை யும் ஏற்பட்டது. அதன் பின்னரே காவல் துறையினர் அரசுத்துறை ஊழியர்கள் மூலம் ஓரளவு லாரிகள் மூலம் குடிநீரும் பாட்டில் குடிநீரும், உணவுப் பொருட் களும் கிடைத்தது.
களத்திலும், மீட்புப் பணியிலும் செங்கொடி தோழர்கள்...
சிஐடியு, சிபிஐஎம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம் உள்ளிட்ட வர்க்க-வெகு ஜன அமைப்புகள் டிசம்பர் 19-ஆம் தேதியிலிருந்து 25-ஆம் தேதி வரை யிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இடங் களில் உணவுகளை சமைத்தும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் மூலம் பல்லா யிரக்கணக்கான உணவுப் பொட்டலங் களை தயாரித்து மார்பளவு தண்ணீர் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்க ளுக்கு வள்ளங்கள் மூலமாக வீடுகளுக்கு சென்று கொடுக்கப்பட்டது. இதில் பல தன் னார்வலர்கள் பல நண்பர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். புறநகர் முத்தையாபுரம், அத்திமரப் பட்டி பகுதியில் கட்டுமான தொழிலாளர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஞானமுத்து உள்ளிட்ட ஆறு பேர் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதில் 3 பேரை மட்டுமே சிஐடியு, சிபிஎம் தோழர்கள் உள்ளிட்டோர் டயர்களை ஒன்றாக கட்டி 8 அடிக்கு மேல் ஆழமான தண்ணீருக்குள் சென்று மீட்டனர்.
ஞானமுத்து, அவரது அம்மா, 7 வயது சிறுமி ஆகியோரை கண்டுபிடிக்க முடியா மல் டிசம்பர் 19-ஆம் தேதி கோவளம் சிஐ டியு மீனவர்களின் மீன்பிடி வள்ளத்தால் பிரேதங்களை கண்டுபிடித்து கரைக்கு கொண்டுவரப்பட்ட சோகமும் நெஞ்சில் நிலை கொண்டது. தங்கமணி நகர் பகுதி யில் பெரிய டிரம்புகளை ஒன்றாக கட்டி வயதானவர்கள், குழந்தைகள், பெண் களையும் சிஐடியு, சிபிஎம் வாலிபர் சங்க தோழர்கள் மீட்டு வந்தனர். வீட்டிற்குள் இறந்துகிடந்த வயதான கட்டுமான தொழி லாளியின் உடல் கரைக்கு கொண்டு வரப்பட்டது.
சிஐடியு, மாதர் சங்கம் இணைந்து முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் உதவியோடு கோவளம் மீனவர் குடி யிருப்பில் இருந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட வர்களை ஒரு வேன் மூலம் மீட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இப்படி அனைத்து பகுதிகளிலும் உயிரை பணயம் வைத்து பாதிக்கப்பட்ட மக்களை செங்கொடி தோழர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள்வதற்கு தமிழக அரசு ஓரளவு நிவாரணம் மற்றும் மீட்பு பணி கள் செய்தாலும், ஒன்றிய அரசு இரண்டு முறை ஆய்வு செய்ததே தவிர பாதிக்கப் பட்ட மக்களுக்கு எந்தவிதமான நிவாரண மும் வழங்கப்படவில்லை. பல்வேறு கார ணங்களை சொல்லி காலதாமதம் செய்து வருகிறது.
சிஐடியு குழுக்கள் உதவி...
இந்த சூழ்நிலையில், கேரளா கூட்டு றவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குழந்தைகள் முதல் பெரியவர் வரையிலான 1500 குடும்பங் களுக்கு ஆடைகளும், கோவை மாவட்ட சிஐடியு சங்கங்கள் ரூ.1,20,000 மதிப்பி லான 1200 குடும்பங்களுக்கு போர்வை யும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, சிஐடியு தமிழ்நாடு மின் பொறி யாளர் அமைப்பும் இணைந்து ரூ.1,50, 000 மதிப்பிலான 250 குடும்பங்களுக்கு அரிசி, பல சரக்கு பொருட்கள், துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் ஒரு லட்சம் மதிப்பிலான 100 குடும் பங்களுக்கு அரிசி, பல சரக்கு பொருட்கள், திருச்சி பெல் தொழிலாளர்கள் (சிஐடியு) சார்பில் ரூ.2,50,000 மதிப்பிலான அரிசி, பல சரக்கு பொருட்கள் 300 குடும்பங்களுக்கும், மதுரை புறநகர் சிஐடியு சார்பில் ரூ.15,000 மதிப்பிலான போர்வைகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த பணிகளில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இணை க்கப்பட்ட சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள உழைப்பாளி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆசிரியர் அமைப்புகள், அரசு ஊழியர்கள், மாதர் சங்கம், வாலிபர் சங்கம் உள்ளிட்ட வர்க்க அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என அரிசி, பலசரக்கு பொருட்கள், காய்கறிகள், ஆடைகள், பால் பவுடர், குடிநீர், பெண்களுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி னர்.