ஆப்பிள் இந்தியாவின் ஒன்பது லட்சம் விவசாயிகளின் இல்லங் களுக்கு வாழ்க்கை தருவது ஆகும். 42 லட்சம் பேர் அதனால் கிட்டும் வரு மானத்தை சார்ந்து இருப்பவர்கள். இவர் களில் பெரும் எண்ணிக்கை இருக்கிற மாநி லங்கள் ஜம்மு - காஷ்மீர், இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகியன. இந்தியா முழுமையும் 24 லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள் விளைகிறது. இதில் காஷ்மீர் மட்டும் 77 சதவீத விளைச்சலை கொண்டது. சராசரியாக ஒரு கிலோ ஆப்பிளுக்கு விவசாயிக்கு கிடைப்பது ரூ. 24 மட்டுமே. 18 லட்சம் மெட்ரிக் டன் சந்தைக்கு வருவதால் மொத்த விவசாயிகளின் வரு மானம் ரூ. 4300 கோடி. ஆனால் சந்தை யில் விற்பனை விலை தரம் வாரியாக கிலோ ரூ .30 முதல் ரூ. 300 வரை உள்ளது. சராசரியாக ரூ. 80 விலை என வைத்துக் கொண்டால் ரூ .14,400 கோடி என்பது சந்தை வருவாயாக உள்ளது.
ஆக விவ சாயிகளுக்கு இதில் கிடைப்பது வெறும் 30 சதவீதம் தான். மீதம் 70 சதவீதம் - அதா வது ரூ. 10100 கோடி - அளிப்பு சங்கிலியில் உள்ள மற்றவர்களுக்குதான் கிடைக்கிறது. மொத்த வியாபாரிகளின் கமிசன் ஏஜெண்டுகள், இடைத் தரகர்கள், குளிர் பதன கிட்டங்கி உடமையாளர்கள், போக்குவரத்து, சில்லறை வியாபாரிகள், கடன் நிறுவனங்கள், அரசுக்கு வரி ஆகி யன அந்த “மற்றவர்களில்”வருபவர்கள். தங்களுக்கு கிடைக்கும் 30% இல் இருந்தே விவசாயிகள் உற்பத்தி செலவை, கூலியை தர வேண்டும். இத னால் அவர்கள் நட்டத்தை சந்திக் கிறார்கள். இது தவிர ஒன்றிய அரசு ஆப்பிள் இறக்குமதிக்கு கதவுகளை திறந்து விட்டுள்ளது. இதனால் மொத்த சந்தை மற்றும் சில்லறை சந்தையில் கார்ப்பரேட் கட்டுப்பாடு நிறுவப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள் மட்டுமே விளைச்சல் ஆகிறது. ஆனால் அங்கிருந்து இந்தி யாவுக்கு இறக்குமதி ஆவது 6 லட்சம் மெட்ரிக் டன். இப்படி சில வியாபார சித்து விளையாட்டுகளும் நடந்தேறுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய விலை சரிகிறது. அரசின் “கட்டுப்படுத்தப்பட்ட வெப்ப நிலை கிட்டங்கியை” (CAS) கௌதம் அதானிக்கு குத்தகைக்கு விட்டிருப்பது கார்ப்பரேட்டுகளின் கூச்ச நாச்சமற்ற லாபங்களுக்காக பொது மக்களின் பணம் வாரி இறைக்கப்படுவதன் வெளிப்பாடே!
பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஜூலை 3) தமிழில் சுருக்கம் : க.சுவாமிநாதன்