பாலஸ்தீன அகதிகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஜெனின் முகாமிற்குள் புகுந்தது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய கொலை வெறித் தாக்குதல்களுக்கு முகாமில் வசித்து வந்த 4 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 18 வயதுக்குக் கீழ் உள்ள ஒருவர் உள்ளிட்ட 45 பேர் இந்தத் தாக்குதலால் காயமடைந்தனர். சந்தேகப்படும்படி நடந்து கொண்ட இருவரைக் கைது செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று வழக்கம்போலவே அப்பாவிகளைக் கொன்றதை நியாயப்படுத்த இஸ்ரேல் முயற்சித்துள்ளது.
கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் டியாஸ்-கானெல் மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா ஆகிய இருவரையும் போப் சந்திக்கவிருக்கிறார். ஜூன் 20 ஆம் தேதியன்று கியூப ஜனாதிபதி அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிகசுடன் வாடிகன் சிட்டியில் போப்பைச் சந்திக்கிறார். ஜூன் 21 ஆம் தேதியன்று, பிரேசில் ஜனாதிபதி லூலா, வாடிகனில் போப்பைச் சந்தித்து உரையாடுகிறார்.
பெரு நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச வரி மற்றும் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் செயல்பாடுகளுக்குக் கட்டுப்பாடு உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட பொது வாக்கெடுப்பு ஸ்விட்சர்லா ந்தில் நடைபெற்றது. ஒவ்வொரு அம்சங்கள் மீதும் தனித்தனியாக வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. பெரு நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச வரியாக 15 விழுக்காடு என்பதற்கு ஆதரவாக 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. தற்போது சராசரியாக 11 விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருக்கிறது.