சென்னை, ஆக. 30 - ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி விரைவில் அறிவிப்பு வெளி யிடப்படும் என்று உள்துறைச் செயலாளர் அமுதா, ஆட்டோ சங்கத் தலைவர்களி டம் தெரிவித்துள்ளார். ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணம் 2013ஆம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. இதனையடுத்து அரசு கடந் தாண்டு மே மாதம் தொழிற்சங்கங்கள், பொது மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. அதில் முன்னேற்றம் இல்லாத தால், மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்கவும், அரசே ஆட்டோ செயலி (ஆப்) தொடங்கவும் கோரி ஓட்டுநர்கள் பல கட்ட போராட்டங் களை நடத்தினர். கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளனம் சார்பில் மாநிலம் முழுவதும் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக திங்களன்று (ஆக.28) தலைமை செயலகத்தில் உள்துறைச் செயலாளர் அமுதா, ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்கத்தின் (மத்திய சென்னை) தலைவர் ஆர்.கபாலி, பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பாலசுப்பிரமணியம், “மீட்டர் கட்டண உயர்வு, செயலி தொட ங்குவது ஆகியவை தொடர்பான கோப்புகள் முதலமைச்சரின் பரிசீல னையில் உள்ளது. எனவே, கட்டண உயர்வு, செயலி தொடர்பான அறி விப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று உள்துறைச் செயலாளர் கூறி னார். தொழிலாளர் வாரியத்தில் அனைத்து முறைசாரா தொழிலா ளர்களையும் ஒருங்கிணைத்து செயலி கொண்டு வருவது தொடர்பாக 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர். இதனை சுட்டிக்காட்டி, மோட்டார் தொழில் வேறு, பிற முறைசாரா தொழில்கள் வேறு. எனவே, ஆட்டோ விற்கு என்று தனியாக செயலி தொடங்க வேண்டியதன் அவசியத்தை விளக்கி னோம். அதனையேற்றுக் கொண்ட உள்துறை செயலாளர், இதுதொடர் பாக போக்குவரத்து, தொழிலாளர் துறை செயலாளர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்” என்று தெரிவித்தார்.