states

தானூர் படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை

திருவனந்தபுரம், மே 11- கேரளத்தில் மலப்புரம் மாவட் டம் திரூர் தாலுகாவில் உள்ள தானூர் தூவல் கடற்கரையில் படகு  விபத்து குறித்து  ஓய்வுபெற்ற நீதி பதி வி.கே.மோகனன் தலைமையி லான நீதி ஆணையம் விசாரிக்கும்  என முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் புதனன்று (மே 10) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆணையத்தின் உறுப்பி னர்களாக நீலகண்டன் உன்னி (ஓய்வு- இந்திய உள்நாட்டு நீர்வழி கள் ஆணையம்), சுரேஷ் குமார் (தலைமைப் பொறியாளர், கேரள  நீர்வழிகள் மற்றும் உட்கட்டமைப்பு லிமிடெட்) ஆகியோர் இருப் பார்கள். பேரிடரில் உயிரிழந்த 22 பேரின்  குடும்பங்களின் வாரிசுகளுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து  தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறி விக்கப்பட்டது. காயமடைந்த வர்களின் மருத்துவச் செலவு மற்றும் மீட்புப் பணிகளுக்காக 25 லட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது. இது தவிர, காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை ஏற்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அபராதத்தை உயர்த்தி சட்டத்திருத்தம்

கேரளாவில் சட்டவிரோத போதைப்பொருள் விளம்பரங்க ளுக்கு அபராதம் ரூ.50,000 ஆக உயர்த்தும் அப்காரி சட்ட திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்பு தல் அளித்துள்ளது. அப்காரி சட்டம்  67ஏ இன் கீழ் தெரியவரும் குற்றங்க ளின் பட்டியலில் சேர்க்கப்படாத பிரிவுகள் 55எச் மற்றும் 55ஐ ஆகிய வற்றின் கீழ் குற்றங்களுக்கு அபரா தம் அதிகரிக்கப்படுகிறது. திரைப்படத்தில் போதைப் பொருள் பயன்படுத்தும் காட்சி இடம்பெறும் போது சட்டரீதியாக எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்  என்ற நிபந்தனை உள்ளது. சட் டத்தை பின்பற்றாத மதுபான நிறு வனங்களின் விளம்பரத்திற்கு, ஆறு  மாத சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்படும். அபராதம் செலுத்தத் தயாராக இல்லை என்றால், சிறைத் தண்ட னைக்கான வழக்காக மாறும். தொழில்நுட்பப் பிழைகள் அல்லது கேரளாவின் சட்ட அமைப்பு பற்றிய அறியாமை காரணமாக அடிக்கடி இத்தகைய மீறல்கள் ஏற் படுவதைத் தொடர்ந்து சிறைவாசம் தவிர்க்கப்படக் கூடிய குற்றமாகக் கருதப்படுகிறது. கேரளாவை வணிக நட்புறவு கொண்டதாக மாற்  றும் நடவடிக்கைகளின் ஒரு பகுதி யாகவும் இந்த சட்டத் திருத்தம் உள்ளது.

வேலை நேரத்தில் தளர்வு

ஆட்டிசம், பெருமூளை வாதம், பல்வகை குறைபாடுகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய நிலையில் 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்  பட்ட குறைபாடுகள் உள்ள குழந்தை களின் பெற்றோராக இருக்கும் அரசு ஊழியர்களில் ஒருவருக்கு பணி நேரத்தில் தளர்வு அளிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சலுகைகள் தவிர, ஒரு மாதத்தில் அதிகபட்ச மாக 16 மணிநேரம் தளர்வு அனும திக்கப்படுகிறது எனவும் அமைச்ச ரவை முடிவு செய்துள்ளது.