சென்னை, ஏப்.19- நீட், க்யூட் நுழைவுத் தேர்வை கைவிடக்கோரியும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமு வேல்ராஜ் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு வருமாறு: புதுச்சேரி மற்றும் திருவாரூர் ஆகிய இரு மையங்களில் மே 12 ஆம் தேதி மருத்துவ கல்வி அனு மதிக்கான நீட் மற்றும் மத்தியப் பல்கலைக் கழக அனுமதிக்கான நுழைவுத் தேர்வுகளை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஒன் றிய அரசு உயர் கல்வி நிறுவனங்க ளில் ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண் டுமென்று வலியுறுத்தி இப்போராட் டம் நடைபெறுகிறது. சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் கோரி மே 26 அன்று சென்னை மற்றும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும். சென்னை ஆர்ப்பாட்டத் தில் தலித் ஒடுக்குமுறை விடு தலை முன்னணியின் அகில இந் திய துணைத் தலைவர் சுபாஷினி அலி பங்கேற்கிறார்.
மாநில சிறப்பு மாநாடு
ஜூலை 2 ஆவது வாரத்துக்குள் சென்னையில் மாநில சிறப்பு மாநாடு நடைபெறும். திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக ஆசிரி யர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும், பாதாள சாக்கடையில் பயன்படுத்தும் இயந்திரங்கள் குறித்த ஆய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.