states

img

பாய்ந்தோடிய வெள்ளமும், பள்ளமான சிலர் உள்ளமும்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம் மற்றும் திருவள்ளூர் மாவட் டங்கள்,  மிக்ஜம் புயலை ஒட்டி ஏற்பட்ட பெருமழையால் வெள்ளக் காடாகின. கடுமை யான பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவதற்கு முன்பே தூத்துக்குடி, திரு நெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்  மாவட்டங்களும் டிசம்பர் 17, 18 இரண்டு நாட்களில்  150 ஆண்டுகளில் காணாத அளவு பெய்த மழை யால் வெள்ளம் பெருக்கெடுத்தது. கடும் துயரத்தில் மக்கள் சிக்கினார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்தது. அப்போது, வெள்ள பாதிப்பு கடுமையாக இருப்பதையும், மாநில அரசின் செயல்பாடுகள் துரிதமாக இருந்ததையும் சுட்டிக் காட்டி பாராட்டினார்கள்.

பொதுவாக டிசம்பர் மாதத்தில் 3 நாட்களில் பொழியக்கூடிய மழை அளவு 36 மணி நேரங்களில் இடைவிடாமல் பெய்தது. 53 செ.மீ., அடர்த்தியுடன் கொட்டித்தீர்த்த காரணத்தினால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன என்று நீரியல் நிபுணர் ஜனகராஜன் தெரிவித்தார். இதைப் போலவே, தென் மாவட்டங்களில் 103 செ.மீ., அளவிற்கு மழை பொழிந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள புயல், பெருமழை ஆகியவற்றின் பாதிப்பை புரிந்துகொள்ள முயற்சிக்காமலே ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது. இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவித்ததில்லை. அதற்கான வழக்கம் இல்லை” என்றும் சீற்றத்துடன் பேசினார். மேலும், 2004  ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் எதிர்கொண்ட சுனாமி பேரழிவைக் கூட மத்திய அரசாங்கம் பேரிடராக அறி வித்ததில்லை என்று விளக்கம் சொன்னார். ஆனால், சுனாமி பேரிடரை தமிழ்நாடு சந்தித்த பின்னர்தான், 2005 ஆம் ஆண்டில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உண்மைக்கு மாறான ஒரு திரிக்கப்பட்ட பிம்பத்தை உருவாக்க நிர்மலா சீதாராமன் ஏன் முயற்சிக்க வேண்டும் என்பது மிக இயல்பாக எழும் கேள்வி.

தலைமைச் செயலாளர் அழைப்பின் பேரில்...
தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படை யில் மாநிலத்தில் ஒரு பகுதியோ, மாநிலம் முழுமையாக வோ இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டால், சம் பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமைச் செயலாளர் ராணு வத்தை மீட்புக்காக அழைக்கலாம். இந்த அடிப்படை யில்தான் தமிழ்நாடு அரசு, ராணுவம் சென்னையிலும் தென் மாவட்டங்களிலும் அழைக்கப்பட்டு, மீட்புப் பணிகளில் இணைந்தது. அரசின் அனைத்து இயந்தி ரங்களும் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளில் சில தொய்வுகள் இருக்கலாம். நடந்துள்ள பேரிடரின் பாதிப்பு அப்படிப்பட்டது. ஆனால் நிர்மலா சீதாராமன் அந்த மீட்பு நடவடிக்கையை மட்டுமே முன்வைத்து தனது பிற கடமைகளை பின்னுக்குத் தள்ளுகிறார்.

நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தின் அடிப்ப டையிலான செயல்பாடுகளை, ஒன்றிய அரசாங்கம் ஏதோ கருணை காட்டியதைப் போல முன்வைப்பது சரி யான வாதம் அல்ல. மேலும், மாநில பேரிடர் எதிர்கொள் ளல் நிதிக்கு, ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய 75 சதவீத பங்குத் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு, ஏற்கனவே நிவாரணம் கொடுக்கப்பட்டுவிட்டதாக சாதிப்பதும் மிக மிக தவறான போக்காகும். தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசால் கொடுக்க முடிந்த, தேசிய பேரிடர் எதிர் கொள்ளல் நிதி பற்றிய மூச்சைக் கூட விடாமல் இருப்பது மிக மிக தவறாகும்.

நெகிழச் செய்த கேரளம்
ஒரு மாநிலம் இயற்கை பேரிடரால் பாதிக்கப் பட்டால், உடனடியாக செய்ய வேண்டியது மீட்பு நடவ டிக்கை. அதைத் தொடர்ந்து நிவாரணமும், மறுகட்ட மைப்பும் மேற்கொள்ள வேண்டும். மாநில அமைச்சர் களும், அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். சி.பி.ஐ(எம்) தலைமை யிலான, கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு, சகோதர மாநிலம் என்ற அடிப்படையில் உத விக்கரம் நீட்டி நெகிழச் செய்தது. அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளரே நிவாரணப் பொருட்களை வாகனத்தில் கொண்டுவந்து சேர்த்தார். கேரளம் பாதிக்கப்பட்டிருந்தபோது தமிழ்நாடு உதவிக்கரம் நீட்டியதை நினைவுகூர்ந்தார். 

நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு பணிகளை அரசுதான் செய்ய வேண்டும். இதற்காக மாநில முதல மைச்சர் 8 மாவட்டங்களுக்கும் சேர்த்து  சுமார் 21,000 கோடிகள் தேவை என ஒன்றிய அரசிடம் முறையாக கோரிக்கை விடுத்துள்ளார். நேரடியாக பிரதமரை தில்லிக்கு சென்று சந்தித்தும் தனது மனுவை ஒப்ப டைத்தார். அந்த கோரிக்கையின் மீது பிரதமர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உத்தரவாதமும் அளித்தார். ஆனால், அடுத்த நாள் அவசர அவசரமாக ஊடகங்களை அழைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழிலேயே பேசினார். தமிழ்நாட்டுக்கு உத விக்கரம் நீட்ட முடியாது என்பதுதான் அந்த பேச்சின் பொருள்.

நிர்மலா சீதாராமன் விளக்க வேண்டும்
இந்த வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பில் நிதியமைச்சகத்தால் செய்ய முடிந்த உடனடியான உதவிகளை ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை தொழில்முனைவோர் சங்கத்தின் ரகுநாதன் எழுப்பு கிறார். “2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை பாதிக்கப்பட்டது. அப்போது பல உதவிகளை மேற்கொண்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியுள்ளார். உண்மையில் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன? காப்பீட்டு  திட்டம் மூலமாக சென்று சேர்ந்த உதவிகள் என்ன என்பதை வெளிப்படையாக்கி பட்டியலிட வேண்டும்” என்று அவர் கேட்டிருப்பது மிக நியாயமானது. 

கடந்த கால வெள்ளத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் என்ன என்ற கேள்வியை நிதியமைச்சர் முன் வைக்கும்போது, ஒன்றிய அரசாங்கம் என்ன செய்தது என்பதை அவர் விளக்கும் கடமை உள்ளது. இப்போது ஏற்பட்ட மழை வெள்ளம் சிறு குறுந்தொழில்களை பாதித்துள்ளது. 8 மாவட்டங்களிலும் ஏராளமான நிறு வனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பில் இருந்து மீளும் காலத்திற்கு வட்டி விடுப்பு வேண்டும், மொத்த கடன் தொகையில் 25 சதவீதத்தை வங்கி யில் கடனாக பெற்றுக்கொள்ள ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும். இது ஒன்றிய நிதியமைச்ச ரால் ரிசர்வ் வங்கியிடம் பேசி செய்ய வைக்க சாத்திய மானதொரு நடவடிக்கை என்று தொழில் முனைவோர் கூறுகின்றனர். நிதியமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு வந்து பாதிப்பு களை நேரிலும் பார்த்துச் சென்றார். ஆனாலும், அவ ரால் செய்ய முடிந்த உதவிகளைக் கூட செய்ய வில்லையே.  இதுதான் ஒன்றிய அரசாங்கத்தின் மன நிலையா?.

இதுவரை இல்லையெனில் இப்போது அறிவியுங்கள்
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் எதிர்கொண்டிருப்பது நிச்சயமாக தேசிய  பேரிடர்தான். ஒருவேளை தேசிய பேரிடர் என அறிவிக்கும் நடைமுறை இதுவரை இல்லை யென்றால், இப்போது அதனை அறிவித்து மக்களை மீட்டுக் கொண்டுவருவதில் கைகொடுக்க முன்வர வேண்டும். நாடே சேர்ந்து இந்த இழப்பில் இருந்து மீள வேண்டும் என்று கேட்டிருக்கும் தொழில் முனைவோர் ரகுநாதனின் குரல் தமிழ்நாட்டின் இயல்பான எதிர்பார்ப்பு ஆகும்.

உண்மையில், தேசியப் பேரிடராக அறிவிக்கும் வழக்கம் இல்லை என்ற வாதத்தை முன்வைப்பதன் நோக்கம், ஒன்றிய அரசிடம் இருந்து உதவியை எதிர் பார்க்காதீர்கள் என்பதை வேறு வார்த்தைகளில் சொல்வதாகத்தான் உள்ளது.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பகுதி 7.1 ‘கடும் தன்மையிலான’ பேரிடர் என்று மத்தியக் குழு அறிவித்த பின் தேசிய பேரிடர் எதிர்கொள்ளல் நிதியில் இருந்து உதவி செய்திட முடியும் என்று குறிப்பிடுகிறது. ஆனால் மத்தியக் குழு அறிக்கைக்கு சமர்ப்பிக்கும் முன்பே ஒன்றிய நிதியமைச்சர் அதனை சாத்தியமில்லை என அறிவித்து, உதவி தரமாட்டோம் என்று கைவிரித்துள்ளார்.

நியாயமான கேள்விகள்
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் எழுப்பியுள்ள  கேள்விகள் மிக நியாய மானவை.

“2015-ஆம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு ஒன்றிய அரசிடம் கோரிய மொத்தத் தொகை என்பது ரூ.1,27,655.80 கோடி ஆகும். இதில் ஒன்றிய பாஜக அரசால் ரூ.5884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசு ஒன்றிய அரசிடம் கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே ஆகும். அதாவது பாஜக தமிழகத்தில் வைத்திருக்கும் வாக்கு சதவிகிதத்துக்கு அதற்கு ஏற்ப நிதி ஒதுக்கு வார்கள் போலும். தமிழகம் குறித்தும், வாழும் மக்கள் குறித்தும் துளியும் அக்கறையற்றதாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது”.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கை யில் திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்கள் இரண் டுமே எடுத்தாளப்பட்டுள்ளன. கடந்த கால போக்குக ளில் இருந்து பாஜக எதையுமே மாற்றிக்கொள்ள வில்லை. தானே ஒரு பேரிடராக அமைந்து நாட்டு மக்களை வஞ்சித்து வருகிறது என்பது பட்டவர்த்தன மாக வெளிப்பட்டுள்ளது. 

இந்த சூழலில்தான் 2024 ஜனவரி 3ஆம் தேதி சென்னையில் உள்ள ஒன்றிய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போரா டும் முடிவினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள் ளது. இந்தப் போராட்டம் தமிழ்நாட்டு மக்களை காத்து, தமிழ்நாட்டின் இயல்பு நிலையை மீட்பதற்கானது. வரி வருவாயின் ஆகப்பெரும்பகுதியை பெற்றுக்கொள்ளும் ஒன்றிய ஆட்சி, பாதிப்பின் போது கைகொடுக்கும் கடமையை செய்யாமல் இருப்பது வஞ்சகமே.  வஞ்சகர் கொட்டம் வீழ்த்துவோம்.