2024-இல் திட்டம் மீண்டும் தொடரும்: கி.வீரமணி
வளர்ச்சியின் எதிரி பிரதமர் மோடி: அருணன்
மதுரை, ஜன.28- சேது சமுத்திரத் திட்டத்தை நிறை வேற்ற வலியுறுத்தி, மாநில அளவி லான பரப்புரை இயக்கம் பிப்ரவரி 3-ஆம் தேதி ஈரோட்டிலிருந்து தொடங் கும் என்று திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தும் திறந்தவெளி மாநாட்டில் அவா் பேசியதாவது: “ சேது சமுத்திரத்திட்டத்தின் அவசியம் குறித்து பிப்ரவரி 3-ஆம் தேதி ஈரோட் டிலிருந்து பயணத்தை தொடங்கு கிறேன். இந்தப் பயணம் சாதி, மதம், அரசியலைக் கடந்தது. தென்னிந்தியா வளம் கொழிக்க வேண்டும். தென் தமி ழகம் வளம் பெற வேண்டும். இளை ஞர்களின் வேலை வாய்ப்பிற்கு உத வும் இந்தத் திட்டம் நிறைவேற வேண்டும். முன்பு இந்தத் திட்டத்துக்குத் தடையாக இருந்த அதிமுக தற்போது 4-ஆக சிதறியிருந்தாலும், ஒன்றாகத் திட்டத்தை ஆதரித்திருப்பதும், இந்தத் திட்டத்துக்கு நாங்கள் எதிரியல்ல என பாஜகவினர் கூறத் தொடங்கியிருப்ப தும், வெற்றியை நாம் நெருங்கி விட்டோம் என்பதற்குக் கூடுதல் உதா ரணங்கள்” என்றார். மேலும், 2024-ஆம் ஆண்டு நாடா ளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக-தோழ மைக்கட்சிகள் வெற்றி பெறும். இந்த 40 தொகுதிகளின் வெற்றி அகில இந் திய அளவில் 400 என்ற இலக்கை எட்டும். மோடியின் ஆட்சியை மாற்ற மக்களும் தயாராகிவிட்டார்கள். நாமும் தயாராகிவிட்டோம் என்றார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரி மோடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேசிய பேராசிரியர் அருணன், “அயோத்தியில் பிறந்ததாகக் கூறப் படும் இராமர் ஏன் பல மைல்கள் கடந்து வந்து இராமேஸ்வரத்தில் பாலம் கட்ட வேண்டும். அறிவியல் பூர்வமாக இராமர் பாலம் இல்லையென நாடாளுமன்றத் தில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துவிட்டார். கிழக்குக் கடற்கரை யிலிருந்து மேற்குக் கடற்கரைக்குச் செல்லும் கப்பல்களும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கப்பல் களும் தூத்துக்குடி துறைமுகத்திலி ருந்து சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா துறைமுகங்களுக்கு செல் லும் கப்பல்களும் இலங்கையைச் சுற்றிச் செல்கின்றன. (424 கடல்மைல்கள், 32 மணி நேரம் கூடுதல் பயணம்). இந்தியா வின் வளர்ச்சிக்கு மோடி எதிரியாக உள்ளார். இல்லாத பாலத்திற்காக முட் டைக்கட்டை போட்டு தொழில் வளர்ச்சி யை முடக்கிவைத்துள்ளனர். வளர்ச்சி நாயகன் நான் தான் எனக் கூறும் மோடி இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவு கிறாரா...? இலங்கையின் வளர்ச்சிக்கு உதவுகிறாரா...? இந்தியா வளரவேண்டுமென்றால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற வேண்டும். சேது சமுத்திரத் திட்டம் நிறை வேறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பாபர் மசூதியை இடித்தது குற்றம். அங்கே இந்து கோவில்கள் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. ஆனாலும், மசூதி யை இடித்தவர்களிடம் இடத்தை ஒப்ப டைக்கவேண்டும் என நீதிமன்றம் கூறி யுள்ளது. நீதிமன்றமும் இப்படியொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனை ஒரே பாரதத்தின் அடையாளம் எனப் பேசி னார். ஒற்றை பாரதம் என்றால் ஒற்றைச் செங்கல் என்று அர்த்தமா? எனக் கேள்வி யெழுப்பினார்.
கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலை வர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், “ சேதுத் திட்டத்தில் அரசியலுக்கும், மதத் துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சேதுத் திட்டத்தை தடுக்க வேண்டும் என்று கருதுபவா்கள்தான், அரசியலை யும் மதத்தையும் திட்டத்துக்குள் புகுத்து கின்றனர். இத்திட்டம், தமிழகத்தின் வளா்ச்சி சார்ந்த திட்டம். சேது சமுத்திரத் திட்டம் 2024-ஆம் ஆண்டு முதல் மீண்டும் தொடங்கும். பாஜகவால் திட்டம் கிடப்பில் போடப் பட்டுள்ளது. சுப்பிரமணியன் சுவாமியை பாலு அண்ணன் சரியாக “கவனிக்க வில்லை போலும்” என்றார்.
புனைவிற்கும்-அறிவியலுக்கும் போராட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், “புராண புனைவு வாதிகளுக்கும்; அறி வியலை நம்புகிறவர்களுக்கும் இடை யிலான கருத்தியல் போராட்டம் இது. அறிவியல் உண்மைகளை ஏற்க முடி யாதவர்கள், புலம்புபவர்கள் நமக்கு எதிரான “உளவியலை” கட்டமைக்கின் றனர். அறிவியலை ஏற்றுக்கொள்ளும் இந்துக்களிடமும் இராமர் இருந்ததாக தவறான பிரச்சாரம் செய்கிறார்கள். புராணம், யூகம், நம்பிக்கை அடிப்ப டையில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கக் கூடாது. “பெரும்பான்மையினர்” என்ற வாதத்தை சுப்பிரமணியன் சுவாமி கட்ட மைத்து வழக்குத் தொடுத்துள்ளார்.
புனிதர் வேஷம் கலைந்தது
குஜராத்தில் இனப்படுகொலையை நடத்திய மோடி இன்று புனிதராகப் போற்றப்படுகிறார். மோடி மீண்டும் பொறுப்பிற்கு வந்தால் மூவர்ணக் கொடி காவி நிறமாகும். அதிபர் ஆட்சி பிரகடனப்படுத்தப்படும். அரசியல் சாச னம் தூக்கியெறிப்படும். இதை நாம் சொல்லவில்லை. பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டத்தைச் சேர்ந்த சாமியார்கள் கூறியிருக்கிறார்கள். பாஜகவிற்கு அதிமுக துணை போகிறது. அவர்களை நத்திப் பிழைக்கி றது அதிமுக. 2024-ஆம் ஆண்டு தேர்தல் அரசியல் சாசனத்தை பாதுகாக்க, மக் கள் ஒற்றுமையை பாதுகாக்க நடை பெறும் தேர்தல், தமிழகத்தில் 40 தொகு திகள் மட்டுமல்ல. நாடு முழுவதும் பாஜக தோற்கடிக்கப்படவேண்டு மென்றார். கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினர் கே. நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினா்கள் கோ. தளபதி (திமுக), திமுக உயா் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா் பொன். முத்துராமலிங்கம், செந்திலதிபன், மு.பூமிநாதன் (மதிமுக), மற்றும் மக பூப்ஜான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலா ளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன், சிபிஐ சார்பில் பெருந்துறை பெரியசாமி, திராவிடா் கழ கத்தின் மாநில அமைப்புச் செயலா் வே. செல்வம், தென் மாவட்ட பரப்பு ரைக் குழுத் தலைவர் தே. எடிசன்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, திராவிடர் கழகத்தின் மாநகர் மாவட்டத் தலைவர் அ. முருகா னந்தம் வரவேற்றார். நிறைவாக, மாவட் டச் செயலாளர் சுப.முருகானந்தம் நன்றி கூறினார்.