ஹைதராபாத்தில் நியூசி லாந்து அணிக்கெதிராக நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் சப்மன் கில் (208 ரன்கள்) இரட்டை சதமடித்து அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 5-வது இந் திய வீரர் என்ற பெருமை யை கில் பெற்றுள்ளார்.
மல்யுத்த பயிற்சிகளுக்கு வரும் சிறுமிகள், வீராங் கனைகள், பெண் பயிற்சி யாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இந்திய மல்யுத்த கூட்ட மைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங் (66) மீது ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் கூட்டாக குற்றம்சாட்டி தில்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடத்தினர். பாலியல் குற்றச்சாட்டு க்கு ஆளாகி இருக்கும் இந்திய மல்யுத்த கூட்ட மைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங் (66) உத்தரப் பிரதேச பாஜக எம்பி ஆவார்.
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே பள்ளி ஒன்றின் மீது ஹெலிகாப்டர் திடீ ரென விழுந்து நொறுங்கி யதில் உள்துறை அமைச் சர் டேனிஸ் மொனாஸ் டிர்ஸ்கி, முக்கிய அதி காரிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். ஹெலி காப்டர் பள்ளியின் மீது விழுந்ததால் 3 சிறுமி களும் பலியாகியுள்ளனர்.
ஒன்றிய அரசின் “ஜீவன் பிரமான்” திட்டத்தின் பெயரில் போலி இணை யதளங்களை உருவாக்கி 1,800 ஓய்வூதியர்களை ஏமாற்றியதாக 4 பேரை தில்லி சைபர் கிரைம் போலீசார் கைது செய்த னர். 1,800 ஓய்வூதியர் களிடமும் குறிப்பிட்ட தொகையை மோசடி கும்பல் கட்டணமாக வசூலித்துள்ளது.
சென்னை கொத்தவால் சாவடியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முதியவரை எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர் ராதா கிருஷ்ணன் கட்டுப் பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
ஏர்பேக் கண்ட்ரோலரில் குறைபாடு காரணமாக இந்தியாவில் 17,362 வாகனங்களை திரும்பப் பெறவுள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் அறி வித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏ.ஆர்.ஆர் பிலிம் சிட்டி படப்பிடிப்பு தளத்தில் எவ்வித பாது காப்பு உபகரணம் இல்லா மல் 40 அடி உயரத்தில் மின்விளக்கு மாற்றிய 40 வயதுமிக்க குமார் என்ற தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.
உலகின் முதன்மையான மென்பொருள் நிறு வனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் 5% ஊழியர் களை பணிநீக்கம் செய்ய வுள்ளதாக தகவல் வெளி யிட்டுள்ளது. ஏற் கெனவே கடந்த அக்டோ பர் மாதம் 11,000 ஊழி யர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்தது என்பது குறிப் பிடத்தக்கது. தொடர்ந்து பெரும் நிறுவனங்கள் ஊழியர்களை வெளி யேற்றி வருகின்றன.