தெலுங்கானாவில் இருந்து ஹஜ் பயணி களின் முதல் குழு திங்க ளன்று ராஜீவ் காந்தி சர்வ தேச விமான நிலையத் தில் இருந்து புனித யாத் திரைக்கு புறப்பட்டது.
எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இந் திய மீனவர்கள் 20 பேர் கராச்சியில் உள்ள மாலிர் மாவட்ட சிறையில் இருந்து விடுதலை செய் யப்பட்டனர். அவர்களின் தண்டனைக் காலம் முடிந்து விடுவிக்கப்பட்ட னர்.
மும்பையில் கடந்த 11 நாட்களில், கொரோனா பாதிப்படைந்து தனியார் மருத்துவமனைகளில் ஐ.சி.யு.வில் சேர்க்கப் பட்ட நபர்களின் எண் ணிக்கை 187 சதவீதமும், அரசு மருத்துவமனை களின் ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 117 சத வீதமும் அதிகரித்து உள்ள தாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அருணாச்சலப் பிர தேசத்தில் பல மாவட்டங் களில் கடந்த சில நாட் களாக பெய்துவரும் தொடர் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஒருவர் பலி யாகியுள்ளார். மேலும் 3 பேர் மாயமாகியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்து பெங்க ளூரு புறநகர் ரயில் திட் டம், பெங்களூரு கன் டோன்மெண்ட் யஷ்வந்த் பூர் சந்திப்பு ரயில் நிலைய மேம்பாடு, மூளை ஆராய்ச்சி மையத்தைத் திறந்துவைத்து பன் னோக்கு மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்க ளுக்கு அடிக்கல் நாட்டி னார்.