states

புதிய விதியை புகுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு விமானப் பயணத்தை மறுக்கும் ஒன்றிய பாஜக அரசு

புதுதில்லி, ஜூலை 29 -  சிவில் விமானங்களில் பயணம் செய்தி டும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக, சிவில் விமானப்போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அறிமுகப்படுத்தியுள்ள விதிகளு க்கு மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாக இயங்குவதற்கான கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ‘மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாக இயங்குவதற்கான கூட்ட மைப்பு’ (‘Freedom of Movement Coali tion’) வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறி யிருப்பதாவது: ராஞ்சி விமான நிலையத்தில் மாற்றுத்திற னாளி இளைஞர் ஒருவரும் அவருடைய பெற்றோரும் இண்டிகோ விமானத்தில் ஏறு வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட அதிர்ச்சித் தகவலை அடுத்து, இப்போது சிவில் விமானப் போக்குவரத்துத்துறை, சிவில் விமானப்போக்குவரத்து சேவைகளில் சில திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் காணப்படுகிறது.    2016 ஜீஜா கோஷ் தீர்ப்புரையின் படியும், 2012 அசோக் குமார் குழு அறிக்கை யின்படியும், எந்தவொரு விமான நிறுவன மும், மாற்றுத்திறனாளிகள் என்பதால் விமா னத்தில் பயணம் செய்வதற்கு அனுமதி அளிக்க மறுக்கக்கூடாது என்று கூறியி ருந்தன.   இப்போது சிவில் விமானப் போக்குவ ரத்துத் துறை இதில் ஒரு திருத்தத்தை அறி முகப்படுத்தி இருக்கிறது. 4.1.36 என்னும் பத்தியில் காணப்படும் வாசகங்கள் வருமாறு: “விமான நிறுவனம் எந்தவொரு நபரையும் அவர் மாற்றுத்திற னாளி (ஊனமுற்றவர்) என்ற அடிப்படை யில் பயணம் மேற்கொள்வதற்கான அனு மதியை மறுக்கக்கூடாது. எனினும், ஒரு வேளை, அந்தப் பயணியின் உடல்நிலை பய ணம் செய்யும்போது நலிவடையக்கூடும் என விமான நிறுவனம் கருதுமானால், அந்தப் பயணி, மருத்துவர் ஒருவரால் பரிசோதனை க்கு உட்படுத்தப்பட்டு அவர் பயணம் செய்வ தற்குத் தகுதி படைத்தவரா, இல்லையா என்பதைத் தெளிவாகக் கூறிட வேண்டும். அவருடைய மருத்துவச் சான்றிதழைப் பெற்றபின்னர், விமான நிறுவனம் உரிய முடிவை மேற்கொள்ள வேண்டும்.”

மாற்றுத்திறனாளிகளை தண்டிக்கும் விதி திருத்தம்

இப்போது சேர்க்கப்பட்டுள்ள மேற்படி 4.1.36 பத்திக்கு முன்பாக 4.1.35 என்னும் பத்தி யில் காணப்பட்ட வாசகங்கள் வருமாறு: “ஒருவர் மாற்றுத்திறனாளி  என்பதன் அடிப்ப டையில் பயணம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு முன், அவ்வாறு அவர் பயணம் செய்வதால் விமானத்தின் பாதுகாப் புக்குக் குந்தகம் விளையலாம் என்றோ அல்லது வேறெந்தக் கருத்தாக இருந்தாலும் அதனையே எழுதி, எழுத்துப்பூர்வமாக அவர் ஏன் பயணம் செய்ய மறுக்கப்பட்டார் எனத் தெரிவித்திட வேண்டும்.” இப்போது சிவில் விமானப்போக்கு வரத்துத்துறை டைரக்டர் ஜெனரல், மாற்றுத் திறனாளிகள் விமானத்தில் பயணம் செய்வது தொடர்பாக மாற்றுத்திறனாளி கள் அமைப்புகள் எழுப்பிவந்த ஆட்சேப ணைகளைக் கண்டுகொள்ளாமல் உதா சீனம் செய்திருப்பது மட்டுமல்ல, முந்தைய 4.1.35இல் இருந்த திருத்தத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார். பயணிகள் அனைவரும் முழுமையாக உடல்நலத்துடன் இருப்பவர்கள் எனக் கூற முடியாது. பொதுவான பயணிகளிலும் உடல் நலமின்றி பயணம் செய்பவர்கள் இருப் பார்கள்.  ஆனால் அவர்களுக்கெல்லாம் மருத்துவச் சான்று கோராத விமான நிறுவனங்கள் அவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் மட்டும் மருத்துவரின் சான்றிதழ் கோருவதும், அதன் மீது விமான நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறு வதும் சரியல்ல.

இந்தத் திருத்தம் மாற்றுத் திறனாளிகளைத் தண்டித்திடும் ஒன்றாகும். விமானங்கள் பயணிக்கும்போது அவற்றுக்கு “சீர்குலைவுகள்” (“disru ptions”) அல்லது “பாதுகாப்பு நிகழ்வுகள்” (“safety” incidents) அல்லது மனிதர்களின் பல்வேறு விதமான நடவடிக்கைகளின் மூல மாகத்தான் ஏற்பட்டிருக்கின்றன என்பதே எதார்த்தமாகும். பயணம் செய்யும் குழந்தைகள் காதுகளில் வலி ஏற்பட்டுக் கத்தக்கூடும், எவரேனும் நெஞ்சு வலியால் துடிக்கக் கூடும், அல்லது குடிப்பழக்கம் உள்ள பயணி மோசமாக நடந்துகொள்ளக் கூடும். இவர்கள் அனைவருக்கும் மருத்து வப் பரிசோதனை செய்யப் போகிறீர்களா? பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் நாள்தோறும் பல்வேறு விதங்களில் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள் சரி யாக இருப்பதில்லை, பல இடங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இத னையெல்லாம் சரி செய்திட ஆட்சியாளர் கள் முன்வரவில்லை.    எனவே, இந்தத் திருத்தத்தை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் சுதந்திரமாக இயங்குவதற்கான கூட்டணி வலியுறுத்தியுள்ளது. மாற்றுத்திற னாளிகள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண, மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.                    (ந.நி.)