சென்னை, மார்ச் 31 பான் கார்டுடன் ஆதார் எண்ணை மார்ச் 31-ந்தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.இந்த நிலையில் வருமான வரித்துறையின் உயரிய அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் இதுதொடர்பாக வெளிட்ட அறிக்கையில் மார்ச் 31 ஆம் தேதியுடன் பான்-ஆதார் எண்ணை இணைக்கா விட்டால் பான் எண் செயல் இழந்துவிடும் என்றும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிக்குள் இணைப்பவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இணைத்தால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.