சென்னை, மே 16- தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற முதுகலை படிப்புக ளில் சேர ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் டான்செட் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் முதுநிலை படிப்புகளில் சேர முடியும். 2022 ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. 14 ஆம் தேதி எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கும், நேற்று எம்.சி., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப் புகளுக்கான தேர்வும் நடந்தன. சென்னை, மதுரை உள்பட 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக் கப்பட்டிருந்தன. தமிழகத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் டான்செட் நுழைவுத்தேர்வை எழுதினர். டான்செட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். டான்செட் நுழைவுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை வெளி யிட அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற ஜூன் 10 ஆம் தேதிக்குள் டான்செட் நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித் துள்ளது.