states

உலகச் செய்திகள்

தற்போதைய பிரதமரும், ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்காவின் தலையீட்டைத் தொடர்ந்து எதிர்த்து வருபவருமான விக்டர் ஓர்போன், மீண்டும் ஹங்கேரியின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட வுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அவரது பிடெஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. 2010 ஆம் ஆண்டிலிருந்து அவர் தொடர்ந்து ஹங்கேரியின் பிரதமராக இருந்து வருகிறார். 

கடுமையான விலையுயர்வை எரிபொருட்கள் சந்தித்து வரும் நிலையில், அதற்கு எதிராகப் போராடி வரும் போக்குவரத்துத் துறையினருடன் பேச பெரு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோ முன்வந்தி ருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “எங்கள் அரசு பேச்சுவார்த்தை மற்றும் பிரச்சனை யைப் புரிந்து கொள்ளும் அரசாகும் சாலையில் பேச்சு வார்த்தை நடத்த அவசியம் இருந்தால் அதையும் செய்வோம்” என்றார்.

டுவிட்டர் நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். முதன்முறையாக, டுவிட்டர் நிறுவனத்தில் தனது பங்கு பற்றி விபரத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். அவருக்கு 9.2 விழுக்காடு பங்குகள் சொந்தமாக உள்ளது. டுவிட்டர் தளத்தை மிகவும் சாதகமான முறையில் பயன்படுத்தியவர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை 8 கோடிப் பேர் பின்தொடர்கிறார்கள்.