சென்னை,நவ.3- பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து, கொடூரத் தாக்குதல் நடத்திய சாதிவெறியர்களின் செய லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கூட்டம் நவம்பர் 2 அன்று சென்னை யில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ. வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. நெல்லை அருகே உள்ள மணி மூர்த்திஸ்வரம் பகுதியில் பட்டி யலினத்தை சார்ந்த இளைஞர்கள் மனோஜ்குமார் (21) மற்றும் அவரது நண்பர் மாரியப்பன் (19) ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் 31 அன்று இரவு 7:30 மணிக்கு தாமிர பரணி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.அப்போது ஆற்றின் கரையோரமாக அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து அவர்களின் செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை பறித்துக் கொண்டு அவர்களின் ஊர் மற்றும் சாதியை கேட்டுள்ளனர்.
பட்டியலினத்தை சார்ந்தவர்கள் என தெரிந்தவுடன் அரு கிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று மனோஜ் மற்றும் மாரி யப்பனை நிர்வாணப்படுத்தி அவர்களது முகத்தில் சிறுநீர் கழித்து துன்புறுத்தி யதுடன், கம்பு மற்றும் ஆயுதங் களால் கடுமையாகத் தாக்கியுள்ள னர். சுமார் 5 மணிநேரம் அவர்களை பிடித்துவைத்து அடித்துள்ளனர். பின்னர் இருவரும் தப்பித்து நிர்வாண மாகவே வீடு வரை சென்றுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் சாதி ஆதிக்க நபர்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனிதத்தன்மை யற்ற முறையில் நடந்துள்ள இச்சம்ப வத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. நெல்லையில் சாதிய ரீதியிலான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு இளைஞர்கள் மத்தியிலான சாதிவெறி மற்றும் பெருகி வரும் போதை பழக்க வழக்கங் களும் முக்கிய காரணமாக உள் ளது. பெரும்பாலும் சமீபத்தில் நடந்து ள்ள இதுபோன்ற தாக்குதல்களில் ஈடு படுபவர்கள் 20 வயதுக்கு உட்பட்ட வர்களே என்பது கவலைக்குரியது. மாவட்ட நிர்வாகமும், காவல்துறை யும் தனிநபர் சார்ந்த பிரச்சனையாக, சட்டம் - ஒழுங்கு பிரச்சனையாக அணு குவது பிரச்சனையை தீர்க்க உத விடாது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது.