states

தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யக் கோரிக்கை

சென்னை, ஜூன் 5- பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் இல்லை என்ற கொள்கை முடிவாக தமிழ்நாடு அரசு  அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சங்கர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:- கடந்த ஏழு ஆண்டுகளாக அரசு உயர், மேல்நிலைப் பள்ளியில் பணி யாற்றும் இடைநிலை ஆசிரியர்க ளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வில்லை. அனைத்து நிலை ஊழியர்க ளுக்கும் தொடர்ச்சியாக பதவி உயர்வு வழங்கப்பட்ட வரும் நிலையில் உயர், மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டு இருந்தது. தற்சமயம் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்று உயர் நீதிமன்ற ஆணை கூறுகிறது. இது அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஒரு பேரதிர்ச்சியாக உள்ளது.  இதுவரை பணி மூப்பு அடிப்படை யில் தேர்ந்தோர் பட்டியல் வெளியிட்டு  அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்த நிலையில் இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக உயர் மேல்நிலைப் பள்ளியில் பணி யாற்றும் இடைநிலை ஆசிரியர்க ளுக்கு பணி மூப்பு அடிப்படையில் தேர்ந்தோர் பட்டியல் கடந்த மூன்றாண் டுகளாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. தொடர்ச்சியாக கோரிக்கை மனு  அளித்தும்,வெகு விரைவில் நடத்து வதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது.  எனவே இதில், அரசு கொள்கை  முடிவாக பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயம் இல்லை என்ற ஒரு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். பணிமூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு எனும்  உயரிய -சிறந்த கொள்கை முடிவினை தமிழ்நாடு அரசு எடுத்திடல் வேண்டும். பணிமூப்பின் அடிப்படையில் பதவி  உயர்வு எனும் தற்போதைய நடை முறையை தொடர்ந்து நிலையை நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித் திருக்கிறார்.

மேல்முறையீடு

 பதவி உயர்வு பெற ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் விரைந்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறார்.