states

மாவட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம்: அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 24- மாவட்டத்திற்கு ஒரு முதியோர் இல்லம் அமைப் பது குறித்து தமிழ்நாடு அரசு  பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த பாஸ்கர் சசி  என்ப வர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், “பெற் றோர் மற்றும் மூத்த குடிமக் கள் நலம் பராமரிப்புச் சட்டப்படி, மாநில முழுவ தும் மாவட்டத்திற்கு ஒரு  அரசு முதியோர் இல்லத்தை அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.  இந்த சட்டப்படி, தமிழ் நாட்டில் அரசு முதி யோர் இல்லங்கள் செயல் படுகிறதா என தகவல் உரி மைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன். அதற்கு  அரசு, முதியோர் இல்லங் களை அரசு நேரடியாக நடத்த வில்லை என்று பதிலளிக்கப் பட்டுள்ளது.  முதியோர் இல்லங்க ளுக்கு மானியம் மட்டும் வழங்கி வருவதாகவும் அரசு  கூறியுள்ளதன் மூலம், சட்ட விதிகளை அமல்படுத்த அரசு தவறிவிட்டது என்று தெரிகிறது.சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த  தலைமை நீதிபதி கங்கா  புர்வாலா மற்றும் ஆதிகேச வலு அமர்வு, எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது. அதற்கு, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என மனு தாரர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதி யோர் இல்லம் இல்லை என்ற மனுதாரர் தரப்பு வாதம் தவறு எனத் தெரியவந்தால், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும் என எச்சரித்த நீதிபதி கள், மனுவுக்கு பதிலளிக்கும் படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.