states

சென்னையில் நாளை முதல்வர் தேசிய கொடி ஏற்றுகிறார்

சென்னை,ஆக,13- சென்னை தலைமை செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை யில் உள்ள கொத்தளத்தில் மிகப்பெரிய கொடிமரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று (ஆக.15) தேசிய கொடியை ஏற்றிவைக்கிறார். பின்னர் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொள்கிறார். கோட்டை  கொத்தளத்தில் இருந்து அவர் உரை யாற்றுகிறார். இதையொட்டி தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  சுதந்திர தின விழா கொண்டாட் டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளி நர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட் டுள்ள காவல்துறை அறிக்கையில், “வருகிற 15.8.2023 அன்று 76-வது  இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணை யாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தர வின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா பேருரையாற்றுகிறார். அதன் பேரில், சுதந்திரன தின விழா நடை பெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 9,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாது காப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை களாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர இடங்களில் கூடு தலாக காவல் குழுவினர் நியமிக் கப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த பட்டுள்ளது. இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள் ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர் முழு வதும் அந்தந்த காவல் சரக எல்லைக் குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள்  மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத் தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறை யினர் மூலம் தீவிர வாகனத் தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.