முதலமைச்சர் இன்று வீடு திரும்புகிறார்
சென்னை, ஜூலை 17- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித் துள்ளது. கடந்த 12ஆம் தேதி, முதலமைச் சருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதனை அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தினார். இதனை யடுத்து, கடந்த ஜூலை 14 அன்று பரிசோத னைக்காக ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அன்றே அவருக்கு சிடி ஸ்கேனும் எடுக்கப்பட்டது. ஸ்கேன் முடிவில் அவருக்கு 10 சதவீத நுரையீரல் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், முதல மைச்சரின் உடல்நிலையை கண்கா ணிக்க தலைமை மருத்துவர்கள் வந்தி ருந்தனர். தொடர்ந்து, தனிமையில் இருந்து வந்த மு.க.ஸ்டாலின் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியானது. இந்த நிலையில் காவேரி மருத்து வமனை ஞாயிறன்று விடுத்துள்ள அறிக் கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (ஜூலை 18) வீடுதிரும்பு வார் என தெரிவித்துள்ளது. “கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினின் தனி மைப்படுத்துதல் காலம் நாளையுடன் நிறை வடைகிறது. அதனால், அவர் வீடு திரும்பு வார். பின்னர், வீட்டில் மேலும் ஒரு வாரம் ஒய்வு எடுக்க வேண்டும்” என அதில் தெரி வித்துள்ளது.
குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்: முதல்வர்
சென்னை, ஜூலை 17- கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது என்றும் காவல்துறை விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்பதால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சின்னசேலம் கலவரம் தொடர்பாக தமிழக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப் பதாவது:- கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவி யின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக் குறிச்சிக்குச் செல்ல உத்தர விட்டுள்ளேன். அரசின் நடவடிக்கை களின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்”என்று பதிவிட்டுள் ளார்.
இந்திய விமானம் கராச்சியில் தரையிறக்கம்
கராச்சி, ஜூலை 17- ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்ட இந்திய விமானம் ஒன்று அவசரமாக பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இண்டிகோ 6இ-1406 விமானம் ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கராச்சியிலிருந்து பயணிகளை அழைத்துவர மாற்று ஏற்பாடாக வேறொரு விமானம் அனுப்பப்பட்டுள்ளது’’ என்று தெரி வித்துள்ளது.