சென்னை,ஜூன் 7- தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 127.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்த நீர் பங்கீடை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கண்காணித்து வருகிறது. இந்த ஆண்டு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அளவுக்கு அதிகமாக பருவ மழை பெய்ததால் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த ஓராண்டில் 281 டி.எம்.சி. தண்ணீர் தமிழ் நாட்டிற்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்த அளவை விட 103.8 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாகும். இதற்கிடையே மேகதாது வில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் புதியதாக அணை ஒன்றை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது தொடர்பாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும் விசாரணை நடத்தி வரு கிறது. காவிரி நதிநீர் தொடர் பாக எந்த முடிவு எடுக்கவும் மேலாண்மை ஆணையத் துக்கு அதிகாரம் வழங்கப் பட்டு உள்ளது. இதனால் மேகதாது விவகாரத்தில் காவிரி நதிநீர் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் வருகிற 17 ஆம் தேதி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத் தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகா ரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத் தின் தலைவர் எஸ்.கே.கல்தர் இந்த கூட்டத்தை நடத்து கிறார். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.