சென்னை, மே 8- தமிழகத்தில் 445 கிராமங்க ளில் தீண்டாமை கடைப்பிடிக் கப்பட்டு வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தீண்டாமை குறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எழுப்பிய கேள் விக்கு, காவல்துறையினர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு பதிலளித்துள்ளது. அந்த பதிலில், தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நில வரப்படி 445 கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப் பட்டு வருவதாகவும், 341 கிரா மங்களில் தீண்டாமை கடைப் பிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதில் அதிகபட்சமாக மது ரையில் 43 கிராமங்களில் தீண் டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்தபடியாக விழுப்புரத்தில் 25 கிராமங்களி லும், நெல்லையில் 24 கிரா மங்களிலும் தீண்டாமை கடைப் பிடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு கிராமத்துடன் இந்த பட்டி யலில் சென்னை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. அதே சமயம் தீண்டாமை யை ஒழிக்க 2021 ஆம் ஆண்டு 597 விழிப்புணர்வு செயல்பாடு களும், 2022 மார்ச் வரை 212 விழிப்புணர்வு செயல்பாடு களும் மேற்கொள்ளப் பட்டுள் ளதாகவும் இதில் அதிகபட்ச மாக திருச்சியில் 50 விழிப்பு ணர்வு நடவடிக்கைகளும், குறைந்தபட்சமாக மதுரையில் 3 விழிப்புணர்வு நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் பதிலில் தெரி விக்கப்பட்டுள்ளது.