states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

ரூ.10 லட்சம் நிவாரணம்

புதுதில்லி, ஜன. 3 - தில்லியில் புத்தாண்டு அன்று அதிகாலை கார் மோதி உயிரிழந்த 20 வயது பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங் கப்படும் என்று தில்லி முதல் வர் அரவிந்த் கெஜ்ரிவால் செ வ்வாயன்று அறிவித்தார்.  மேலும், “உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைப் பதை உறுதி செய்வோம்” என கெஜ்ரிவால் உறுதி யளித்துள்ளார்.  இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் கார் மோதி  பலியாகிய நிலையில், பெண்ணின் உடல் பல கிலோ மீட்டர் தூரம் காரில் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெஸ்லாவுக்கு ரூ.18 கோடி அபராதம்

சியோல், ஜன. 3 - உலகின் முன்னணி பணக் காரர்களில் ஒருவரும், டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறு வனம், “குளிர்காலத்தில் கார்களின் மைலேஜ் 50 சத வீதம் குறைவதை மறைத்து, எரிபொருளை மிச்சப்படுத்து வது போல் மக்களை விளம் பரம் மூலம் ஏமாற்றியதாக” தென் கொரிய வர்த்தக ஆணையம் குற்றம்சாட்டி யது.  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையில் குதித்த தென்கொரியா, டெஸ்லாவுக்கு ரூ.18.50 கோடி அபராதம் விதித்துள் ளது.

நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று ஒன்றிய அரசு கொண்டுவந்த சட்டத்  திருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2020-இல்  ரிட் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணையை 4 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். நீட் தொடர்பான வழக்கை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருக்க விரும்பவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ராகுலுக்கு ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் வாழ்த்து!

ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நடைபயணம்’ உ.பி. மாநிலத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், அயோத்தி ராமஜென்மபூமி கோயிலின் தலைமை  அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ராகுல் காந்திக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றை  அனுப்பியுள்ளார். அதில், “உயரிய நோக்கத்திற்காக நீங்கள் இந்த நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறீர்கள். நாட்டு மக்கள் நலனுக்காகவும், அவர்களின் மகிழ்ச்சிக்காக வும் இந்த சிரத்தையை நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்கள் நல்ல நோக்கம் வெற்றி  பெற வாழ்த்துகிறேன். ராமபிரானின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும்”  என்று குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 1-இல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்?

2023-2024 நிதியாண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-இல் துவங்கி பிப்ரவரி 8 அல்லது 9-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 2-ஆவது வாரத்தில் துவங்கி மே முதல் வாரம் வரை இரண்டாம் அமர்வும் நடை பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, 2023-2024 நிதியாண்டிற் கான பட்ஜெட்டை, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்து உரையாற்றுவார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டா வது அமர்வு, நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோடி துவக்கிவைத்த வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு!

இந்தியாவின் 7-ஆவது ‘வந்தே பாரத்’ ரயிலை கடந்த டிசம்பர் 30 அன்று பிரத மர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த ரயிலைத் துவக்கி  வைத்து நான்கு நாட்களே ஆன நிலையில், மேற்கு வங்கத்தில் மால்டாவின் குமார்கஞ்ச் ரயில் நிலையம் அருகே ‘வந்தே பாரத்’ ரயில் கல்வீசித் தாக்கப்பட்டுள்ளது. ஹவுரா  நோக்கிச் சென்ற இந்த ‘வந்தே பாரத்’ ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப் பட்டுள்ளன. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல் வீசப்பட்டதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

‘உயர்சாதி ஏழைகளுக்கு 5% இடஒதுக்கீடு போதும்’

“பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் அந்த பிரிவினருக்கு அதிகபட்சமாக 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால் போதுமானது. அவற்றில் மீதமுள்ள 5 சதவிகிதம் வீரசைவ - லிங்கா யத் மற்றும் ஒக்கலிகர் சமூகங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். எந்தெந்த சமூ கங்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறித்து மார்ச் மாதத்திற்குள் அறிவிக்கப்படும்” என்று கர்நாடக பாஜக அரசின் தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள் நடத்த அரசு தடை! 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பாகங்கா - பாமுரு சாலையில் உள்ள  கந்து கூரில் உள்ள என்டிஆர் சந்திப்பு அருகே கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி தெலுங்கு  தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபுவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான சர்ச்சை அடங்குவதற்கு உள்ளேயே கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலும் 3 பேர், சந்திரபாபுவின் பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர். இந்நிலையில், ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதித்து ஜெகன்மோகன் ரெட்டி அரசு உத்தரவிட்டுள்ளது.

வாக்குறுதியை மீறி தர்காவை இடித்த பசவராஜ் பொம்மை

“நான் உப்பள்ளி பைரிதேவரகொப்பா தர்காவுக்கு வந்தேன். இந்த தர்காவை இடிக்க வேண்டாம் என்று முதல்வரிடம் (பசவராஜ் பொம்மை) கூறினேன். அவர்,  தர்காவை இடிப்பது இல்லை என்று கூறினார். ஆனால் இரவோடு இரவாக அந்த தர்காவை இடித்து தள்ளி விட்டனர். நான் பேசியபிறகு என்ன ஆனது என்று தெரிய வில்லை. இது முஸ்லிம் சமூகம் மீது பாஜக நடத்திய தாக்குதல் ஆகும். அந்த கட்சியின் நோக்கமே, விரோதமான அரசியலை செய்ய வேண்டும் என்பதுதான். இந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினருடன் கலந்து ஆலோசிக்காமல் தர்காவை இடித்ததை கண்டிக்கிறேன். இந்த தர்காவை இடித்தால் மதக்கலவரம் நடைபெறும் என்று பாஜக-வினர் நினைத்தனர். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்த தர்கா இடிக்கப்பட்டதற்கு ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியே நேரடி காரணம்” என்று காங்கிரஸ் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா பேட்டியில் கூறியுள்ளார்.

முன்ஜாமீன் கோரும்  முன்னாள் அமைச்சர்

குடும்பப் பிரச்சனையில் அளிக்கப்பட்ட புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கடலூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 

சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

 ரூ.1,530 கோடி வங்கி மோசடி விவகாரத்தில் எஸ்இஎல் (SEL) டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட் மற்றும் அதன் இயக்கு நர், நிறுவன தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

திரையரங்குகளுக்கு முழு உரிமை

திரையரங்குகளுக்குள் உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்வதற்கான விதிமுறைகள்,  நிபந்தனை களை வகுக்க  திரையரங்குகளுக்கு முழு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராகுல் பயணத்தில்  பரூக் அப்துல்லா

ராகுல் காந்தி நடத்திவரும் இந்திய ஒற்றுமை நடை பயணத்தில்  உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி யும் ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில்தான் கடன் தள்ளுபடி

 நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது என்று சட்டப்பேரவை துணைத் தலைவர்  பிச்சாண்டி தகவல் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

சென்னை,ஜன.3- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி திங்களன்று (ஜன. 3) தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்போருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  இதற்காக ரூ.2,430 கோடி நிதி  ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கலுக்கான பரிசுத் தொகுப்பை வாங்க ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் கடை களில் குவிவதைத் தடுக்க வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. 

உதயநிதி ஸ்டாலினுக்கு  எதிரான வழக்குகள் தள்ளுபடி

சென்ன்னை,ஜன.4- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக் கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், இந்த இரு வழக்குகளையும் சென்னை  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை  அடுத்து தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இந்த மனு மீது நடத்தப்பட்ட விசா ரணை முடிவில், அமைச்சர் உதயநிதி  ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு  16,932 சிறப்புப் பேருந்துகள்

சென்னை,ஜன.3- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவ தும் 16,932 சிறப்புப் பேருந்து கள் இயக்கப்படும் என்று போக்கு வரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை யில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்க ளுக்கு செல்வது வழக்கம். இதன் காரணமாக, தேவைக்கு ஏற்ப தமிழ கம் முழுவதும் சிறப்பு பேருந்து களை இயக்க அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள் நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில், இந்த  ஆண்டு பொங்கல் சிறப்பு பேருந்து கள் இயக்கம் குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் திங்க ளன்று (ஜன.3) சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற் றது. இதில் பொங்கல் பண்டி கையை முன்னிட்டு, தமிழகம்  முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள்  இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 6,300 பேருந்துகளுடன் 4,449 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 10,749 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,183 சிறப்பு பேருந் துகள் இயக்கப்படவுள்ளன. மேற் கண்ட 3 நாட்களில் மட்டும் சிறப்பு பேருந்துகள் மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

 

உலகச் செய்திகள்

 

தற்போது நடந்து வரும் ராணுவ நடவடிக்கைகளில் இரு தரப்பிலும் சிக்கிய வீரர்களை பரிமாறிக் கொள்வது என்று ரஷ்யாவும், உக்ரைனும் முடிவெடுத்தன. அதன்படி, 222 வீரர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பியுள்ளார்கள். 82 ரஷ்ய வீரர்களை உக்ரைன் விடுதலை செய்தது. 140 உக்ரைன் வீரர்களை ரஷ்யா விடுதலை செய்தது. 140 பேரில் எட்டு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். உக்ரைனில் உள்ள ரஷ்யர்கள் மீது நடந்த தாக்குதல்களுக்கு எதிராகவே தங்கள் நடவடிக்கை என்று ரஷ்யா கூறி வருகிறது.

ஏமனுடனான எல்லைப்பகுதியில் சவூதி அரேபியாவின் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 18 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏமனின் வடமேற்கு மாகாணமான சாடாவின் குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஏமன் அரசு அமெரிக்கா மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குழப்ப நிலையை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது என்று ஏமன் ராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள புஷ்ப குமார் தஹல் என்ற பிரச்சந்தா, ஜனவரி 10 ஆம் தேதியன்று நம்பிக்கை தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கிறார். ஜனவரி 9 ஆம் தேதியன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்குகின்றன. இரண்டாவது நாளே நம்பிக்கையைப் பெறுவது என்று பிரச்சந்தா முடிவெடுத்துள்ளார். நேபாள கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் ஆதரவு இருப்பதால் பெரும்பான்மை வாக்குகளை அவர் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.