states

தீக்கதிர் விரைவு செய்திகள்

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு

நேபாளம், ஜூன் 18- ஆசிய நாடு களில் ஒன்றான நேபாளத் தின் கிழக்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வரு கிறது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்ட தால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள னர். இந்த நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதவிர, வெள்ளம் மற் றும் நிலச்சரிவில் சிக்கி இது வரை 25 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. 

கத்ராவில் நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீர், ஜூன் 18- ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ரா அருகே மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவானது. ஞாயிறன்று அதிகாலை 3.50 மணிக்கு 80 கி.மீ. தொலைவில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜேஇஇ தேர்வு முடிவு

புதுதில்லி, ஜூன் 18- ஜேஇஇ அட்வான் ஸ்டு தேர்வு முடிவுகள் jeea dv.ac.in என்ற இணைய தளத்தில் ஞாயிறன்று வெளி யிடப்பட்டன. இந்த ஆண்டு சுமார் 1.8 லட்சம் மாண வர்கள் ஜேஇஇ அட்வா ன்ஸ்டு தேர்வுகளை எழுதி யிருந்தனர். அதில் 43,773 பேர் தகுதி பெற்றுள்ள னர். ஜேஇஇ அட்வான்ஸ்டு ஜூன் 4 ஆம் தேதி நடத்தப் பட்டது, அதன் பிறகு பதில் தாள்கள் ஜூன் 9 அன்றும், தற்காலிக விடைத்தாள்கள் ஜூன் 11 அன்றும் வெளி யிடப்பட்டன.

பள்ளியில் பயங்கரவாதிகள் தாக்குதல்

கம்பாலா, ஜூன் 18- கிழக்கு ஆப்பி ரிக்காவில் உள்ள உகண்டா நாட்டின் எல்லையோர கிராமமான பொண்ட்வியில் உள்ள லூபிரிகா மேல் நிலைப் பள்ளியில் பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தி னர். இதில் 41 பேர் கொல்லப் பட்டனர். மேலும் மாணவர் கள் தங்கும் விடுதி எரிக்கப் பட்டது. அங்கு இருந்த  உணவு விடுதி சூறையாடப் பட்டது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து 41 சடலங்களை மீட்டனர். 8 பேர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டுள்ள னர். பலியானவர்களில் 38 பேர் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. மாண வர்களை கொன்றுவிட்டு காங்கோ நாட்டில் புகுந்த பயங்கரவாதிகளை கண்டு பிடிக்கும் பணியில் உகண்டா  ராணுவம் ஈடுபட்டுள்ளது.

ஜெயின் கோயிலில்  ஆடை கட்டுப்பாடு 

சிம்லா, ஜூன் 18- சிம்லாவில் உள்ள  100 ஆண்டு பழமையான ஜெயின் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கோயில் நிர்வாகம் உத்த ரவு பிறப்பித்துள்ளது. கோயி லுக்கு வரும் பக்தர்கள் கண்ணியமான ஆடை அணிந்து வர வேண்டும். கிழிந்த ஜீன்ஸ் பேண்ட், நைட்டி, அரைக்கால் டவுசர்,  ஸ்கர்ட் அணிந்து வரு பவர்கள் கோயிலுக்குள் அனுமதிப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளனர்.

அரசு நீட் தேர்வு பயிற்சியில் படித்த 106 பேர் தேர்ச்சி

திருச்சிராப்பள்ளி, ஜூன் 18- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்களில் 106 பேர் இந்தாண்டு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) தேர்ச்சி பெற்றுள்ளனர். முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம். ஸ்ரீதர் 472 மதிப்பெண்கள் பெற்று  மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் முதலி டம் பிடித்தார். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். ஏழு மாணவர்கள் 300 முதல் 400 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 58 மாணவ, மாணவியர் தேர்வெழுத தகுதி  பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளி களில் சாவித்ரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பி.ஐஸ்வர்யா 556 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை உயர்  அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு களை விட இந்த ஆண்டு அதிக மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள் ஆண்டு முழுவதும் அரசாங்கத்தால் வழங்கப்படும் இல வச பயிற்சியில் கலந்து கொண்டவர்கள். மாண வர்களுக்காக நடத்தப்பட்ட மாதிரித் தேர்வுகள் மற்றும் விரிவான பயிற்சி ஆகியவை இந்த வெற்றிக்கு பங்களித்தன” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

கொரோனாவுக்கு 68,92,220 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.92 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 68,92,220 பேர்  கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழு வதும் கொரோனாவால் 69,04,30,478 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 66,29,42,407 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில்  இன்று முதல்  4 நாட்களுக்கு மழை

சென்னை,ஜூன் 18- தமிழகத்தில்  திங்கட்கிழமை (ஜூன் 19) முதல்  4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் அநேக இடங்களில் திங்கள் கிழமை  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திரு வண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்பு ரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டி னம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரி யலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச் சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜூன் 20ம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரை க்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப் படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கும்.

ஆளுநரை  அகற்றக் கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்

சென்னை,ஜூன் 18-  தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலி ருந்துஆர்.என்.ரவியை அகற்றக்  கோரி மதிமுக  கையெழுத்து இயக்கத்தை நடத்தவுள்ளது. வரும் 20 ஆம் தேதி  சென்னையில்,  மதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள தாயகத்தில்  நடைபெறும்  நிகழ்ச்சியில்  அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ  கலந்துகொண்டு கையெழுத்து  இயக்கத்தைத்  துவக்கி வைக்கிறார். அக்கட்சியின் மற்ற நிர்வாகிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்  கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள்.

அறிவிக்கப்படாத மின்வெட்டால்  புதுச்சேரி மக்கள் அவதி 

புதுச்சேரி, ஜூன் 18- புதுச்சேரி வில்லியனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறிவிக்கப் படாத மின்வெட்டால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.   “கடந்த சில நாட்களாக புதுச் சேரியில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பகல், இரவு நேரங்களில் மக்கள் கடும் அவதியடைகின்றனர். குறிப் பாக வில்லியனூர் கோட்டை மேடு அதன் சுற்று வட்டாரப் பகுதிகள், உறுவையாறு,அரும்பார்த்தபுரம் போன்ற பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. நாள்தோறும் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை செய்யப்படுகிறது. 8 முறைக்கு மேல் மின்சாரம் நிறுத் தப்பட்டு வழங்கப்படுகிறது. இது கடந்த 3 தினங்களாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக் குள்ளாகியுள்ளனர். அதிலும் கைக்  குழந்தைகளுடன் வசிப்பவர்களும், நோயாளிகளும் இந்த மின் தடை ஏற்படும் நேரத்தில் மிகவும் அவதிப்படுவ தாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகச் செய்திகள்

நெதர்லாந்து நாட்டைத் தேவையில்லாமல் பெரிய நாடுகளுக் கிடையில் நடைபெறும் மோதல்களுக்குள் இழுத்துவிட வேண்டாம் என்று அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி வெளி யிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் எல்லைகளைத் தாண்டி நெதர்லாந்து ராணுவம் நிறுத்தப்படக்கூடாது. நெதர்லாந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் ரஷ்யாவுக்கு எதிரான  தடைகளை அகற்ற வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கை களை அக்கட்சி முன்வைத்துள்ளது.

உக்ரைன் நெருக்கடியால் ரஷ்யா உலக அரங்கில் தனிமைப் படுத்தப்பட்டு விட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் கூறி வருகின்றன. ஆனால், முன்பைவிட ரஷ்யாவின் வர்த்தகம் மேலும் பல நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது. சீனா, ஈரான், தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவு பலமடைந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக ரஷ்யாவுக்கு சென்றிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி முகம்மது பின் ஜாயத் அல் நஹ்யான், அந்நாட்டுனான உறவை பலப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

தங்கள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று கோரி  லெபனானில் மக்கள் பெரும் ஆவேசத்துடன் போராட்டங் களை நடத்தி வருகிறார்கள். வாழ்க்கை முழுவதும் கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தை ஊழல் அதிகாரிகளின் தவறுகளால் தாங்கள் இழக்க முடியாது என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். அரசு தலையிடாமல் இருப்பதால் மக்களின் போராட்டம் வன்முறையாக மாறி, சில வங்கிகளின் கட்டிடங்களுக்கு தீ வைப்பதில் முடிந்திருக்கிறது.