states

img

மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக!

சென்னை,  மார்ச் 28- மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லாயிரக்கணக் கான   ஊழியர்கள் திரண்டு ஆவேச போராட்டத்  தில் ஈடுபட்டனர். மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்பக் கோரி மார்ச் 28ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்திருந்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை முதலே சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகம் அருகே  ஊழியர்கள் குவியத் தொடங்கினர். பின்னர் அங்கிருந்து கோட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை பி.எஸ்.என்.எல். அலு வலகம் அருகே காவல் துறையினர் தடுத்தனர்.  இதையடுத்து அவர்கள் அங்கிருந்து பேரணியாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை சென்றனர். இந்த பேரணி, பொதுக்கூட்டத் தில் மாநிலம் முழுவதிலும் இருந்து 30 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏறக்குறைய 5 மணி நேரத்திற்கும் மேலாக பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

அனைத்து தொழிற்சங்கத்தலைவர்கள் 

பின்னர் அங்கே கணக்காயர் களத் தொழி லாளர் சங்கம் கே.சந்திரசேகர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மின் ஊழியர்  மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் வரவேற்றார். மின் ஊழியர்  மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், வி.எஸ்.சம்பத்குமார் (பொறியாளர் சங்கம்), ஏ.சேக்கிழார் (எம்ப்ளாயீஸ் பெடரேசன்), எம்.சுப்பிரமணியன் (தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்), எஸ்.மூர்த்தி (மின்சார தொழிலாளர் சம்மேளனம்), டி.வி.சேவியர் (ஐஎன்டியுசி), இ.ரவிச்சந்திரன் (மின் ஊழியர் காங்கிரஸ்), எஸ்.பாரி (மின்வாரிய ஜனதா தொழிற்சங்கம்), டி.ரத்தினவேல் (கார்டு பில்லிங் ஸ்டாப் யூனியன்), டி.விஜயரங்கன் (அண்ணா தொழிற்சங்கம்), கே.ஜி.சாமி (டாக்டர் அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன்), ஆர்.கோவிந்தராஜன் (மின்வாரிய இன்ஜினியர்ஸ் யூனியன்) உள்ளிட்டு கூட்டமைப்பின்தலை வர்கள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதுகுறித்து எஸ்.ராஜேந்திரன் (சிஐடியு) செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி யாற்றக்கூடிய பல்லாயிரக்கணக்கான ஊழி யர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் கோரிக்கைகள் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு, மின்வாரிய நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும், பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

58 ஆயிரம் இடங்கள் காலி 

மின்சார வாரியத்தில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.  காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மாறாக அவுட்சோர்சிங் முறையை நிர்வாகம் அமல்படுத்துகிறது. அதேபோல் ரீடெப்ளாய்மெண்ட் என்ற புதிய முறையை கொண்டு வருகிறார்கள். இந்த நடைமுறை மின்சார  வாரியத்தை தனியார் மயமாக்கும் நட வடிக்கையாகும். எனவே அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். 22.2.2018 அன்று முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. அதனடிப்படையில் கள உதவி யாளர், உதவிப் பொறியாளர், கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அரசாணை 100இன் அடிப்படையில் பணியாளர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசு உத்தரவாதத்துடன் கூடிய, முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறினார்கள். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

வாக்குறுதிகள் என்னாச்சு?

கடந்த காலங்களில் போராடும் போது பிபி 2 ரத்து செய்யப்படும் எனக் கூறினார்கள். ஆனால்  இதுவரை ரத்து செய்யப்படவில்லை. 1.12.2019 முதல் மின்வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை வழங்கப்பட வில்லை. எனவே மேற்கண்ட நியாயமான கோரிக் கைகளை நிறைவேற்ற அரசும், நிர்வாகமும் முன்வர வேண்டும். இல்லையென்றால் நீண்ட நெடிய போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் ஏற்படும் பாதிப்பு களுக்கு அரசும், நிர்வாகமும்தான் பொறுப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.