states

தீக்கதிர் விரைவு செய்திகள்

டெண்டர் முறைகேடு வழக்கு: வேலுமணிக்கு ஆவணங்களை  வழங்க உத்தரவு

தரவு சென்னை, ஜூன் 21- முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில்  சென்னை மற்றும் கோவை மாநகராட்சி களில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் நடந்த முறைகேடுகள் குறித்து  முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து டெண்டர் முறைகேடு தொடர்பாக வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் 10 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி  முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி  மாலா ஆகியோர் அடங்கிய  அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது “வழக்கு ஆவணங்களைப் பெற வேலுமணி தரப்புக்கு உரிமை உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை வேலுமணி தரப்புக்கு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

ரூ.34.76 அமெரிக்க டாலர் பறிமுதல்

சென்னை,ஜூன் 21- சென்னை சர்வதேச விமான நிலையத் திலிருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ்  ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் செவ்வாயக்கிழமை (ஜூன்21) காலை புறப்பட தயாரான நிலையில், பயணி களை சுங்கத்துறை அதிகாரிகள் கண் காணித்து, அவர்களது உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது ஆலந்தூரை சேர்ந்த முகமது ஷாருக்கான் (28) என்பவர் விமானத்தில் துபாய்க்கு, சுற்றுலா பயணியாக செல்ல வந்திருந்தார். அவர்  மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து பயணி முகமது ஷாருக்கானின் உடைமைகளை சோதனையிட்டனர். அவர் சூட்கேசுக்குள் மறைத்து வைத்திருந்த மொத்தம் ரூபாய் 34.76 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் உட்பட வெளி நாட்டு கரன்ஸிகளை  சுங்கத்துறை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். அவரிடம்  நடத்திய விசாரணையில் மற்றொருவர் கொடுத்து அனுப்பிய பணத்தை எடுத்துச் சென்றதை அவர் ஒப்புக்கொண்ட தாகவும்  இதையடுத்து முகமது ஷாருக் கானிடம் இந்த பணத்தை கொடுத்து அனுப்பியவர் யார் என்பது பற்றி தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வரு வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வணிக வங்கிகளோடு கூட்டுறவு வங்கிகள் போட்டிபோட வேண்டும்

சென்னை,ஜூன் 21- தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி 2021-22 ஆம் ஆண்டில் வரிக்கு முந்தைய மொத்த லாபமாக ரூ.309 கோடியை ஈட்டி யுள்ளதை நினைவு கூர்ந்தார். 2022-23ஆம் ஆண்டில் மென்மேலும் சிறப்பாக  செயல்பட்டு, திட்டங்களை செயல் படுத்துவதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். தகவல் தொழில்நுட்பத் துறையில் கொண்டு வரப்படவுள்ள யூபிஐ போன்ற  திட்டங்களை வருங்காலத்தில், கூட்டுறவு வங்கிகள் வணிக வங்கிகளோடு போட்டி போடக் கூடிய அளவில் வியா பாரத்தினை பெருக்கவேண்டும் என்றும் ஜெ.ராதாகிருஷ்ணன்  வலியுறுத்தினார்.

பந்தல்குடியில்  மூதாட்டியிடம் நகை பறிப்பு

அருப்புக்கோட்டை, ஜூன்.21- அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் கோவிலில் சாமி கும்பிடச் சென்ற மூதாட்டியிடம் நகை பறித்தவரை போலீ சார் தேடி வருகின்றனர். பந்தல்குடி காமாட்சி நகரைச் சேர்ந்தவர் மூக்கம்மாள்(72). இவர் அருகில் உள்ள சுந்தரநாச்சியம்மன் கோவிலுக்கு சாமி  கும்பிடச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது, அவர்  கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் நகை மாயமானது தெரிய வந்தது.  இதையடுத்து, மூக்கம்மாள், பந்தல்குடி காவல் நிலை யத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

பட்டாபிராம் டைடல் பார்க் எப்போது திறப்பு?

சென்னை,ஜூன் 21- திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராமில் டைடல் பார்க் கட்டடப்பணிகள், கடந்த  2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலை யில் டைடல் பார்க்கை தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் டிட்கோ அலுவல ர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் கலந்துகொண்டு டைடல் பார்க் அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்ன ரசு, “கடந்த 2 ஆண்டுகளாக கட்டடப் பணிகள் தேக்கமடைந்திருந்தது. தற்போது இதன் பணியை வேகமாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் சதுர அடியில் கட்டப்படும் இந்த தொழில்நுட்பப் பூங்கா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும். 21  மாடி கட்டடமும் சென்னையில் உள்ள தொழில்நுட்பப் பூங்கா எப்படி இயங்குகிறதோ அதே விதி முறைகள் படி, பட்டாபிராம் தொழில்  நுட்பப்பூங்காவும் இயங்கும். இந்த தொழில் நுட்பப் பூங்காவில் சுமார் 2,000 பேர் பணிபுரிய வாய்ப்புள் ளது” என்றார்.