states

தற்காலிக ஆசிரியர் நியமனம் கூடாது

சென்னை,ஜூன் 25- தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் மதிப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமனம் செய்யும் முடிவை மாநில அரசு கைவிடவேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து மாநில பொதுச்  செயலாளர் ச.மயில் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:- தமிழகத்தில் 2012 இல்  முதன் முதலில் நடைபெற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து இடைநிலை  மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும்  பணி நியமனம் செய்யப்பட்டார் கள். 2013இல் நடைபெற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்க ளில் ஒரு சிலருக்கு மட்டும் பணி  நியமனம் வழங்கப்பட்டது. அதன்  பின்பு இரண்டு முறை நடைபெற்ற  தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற வர்களுக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதனால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பல்லாயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் இன்று  வரை பணிவாய்ப்பை எதிர் நோக்கிக்  காத்திருக்கின்றனர்.

இதுபோன்று அரசு மேல் நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணி யிடங்களை நிரப்ப ஆசிரியர்  தேர்வு வாரியம் நடத்திய போட் டித் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்று சான்றிதழ் சரி பார்ப்பில் கலந்துகொண்ட பல ருக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை.  இவ்வாறு இடைநிலை ஆசிரி யர், பட்டதாரி ஆசிரியர், முது கலை ஆசிரியர் பணி நியமனத் திற்கு முழுத்தகுதி பெற்ற பல்லாயிரக் கணக்கானோர் இருக்கும் நிலையில், 13331 ஆசிரி யர் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியம னம் செய்வது என்பது வேலை வாய்ப்பை எதிர்நோக்கி பல ஆண்டுகளாக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கானோரின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். இதற்கு முன்பு 1990 மற்றும்  2004ஆம் ஆண்டுகளில் ஆசிரி யர்கள் தொகுப்பூதியத்தில் நியம னம் செய்யப்பட்டனர். 1990 இல் தொகுப்பூதியத்தில் நியம னம் செய்யப்பட்ட ஆசிரியர்க ளுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க உயர்நீதிமன்றமே உத்தரவிட்டது. அதேபோன்று 2004இல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் பெரியார் திடலில் மாநில அளவிலான கோரிக்கை மாநாட்டை நடத்தியது. 

அன்று எதிர்க்கட்சியாக இருந்த இன்றைய ஆளும் கட்சியை சேர்ந்த ஆற்காடு வீரா சாமி  கலந்து கொண்டார். திமுக  ஆட்சிக்கு வந்தவுடன் தொகுப்பூதி யம் ரத்து செய்யப்பட்டு கால முறை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் 1.6.2006 முதல் அனைத்து தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது என்பது கடந்த கால வரலாறு. இவ்வாறு தொகுப்பூதியத்தை ஒழித்து ஆசிரியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கிய கலை ஞரின் வழியில் நடைபோடும் இன்றைய தமிழக அரசு, மதிப்பூ திய நியமனத்தைக் கொண்டு  வருவது சிறிதும் பொருத்தமற்ற தாக உள்ளது. தமிழக அரசின் இந்த  நடவடிக்கை இனி வருங்காலங்க ளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதையே தமிழக அரசு கைவிட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமன அதிகாரம் என்பது தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியோ என்ற ஐயத்தையும், எதிர்காலத்தில் பள்ளியின் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு  வழங்குவதற்கான முன்னோட் டமோ என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தமிழக அரசு தற்கா லிக மதிப்பூதியம் ஆசிரியர்களை நியமனம் செய்வதைக் கைவிட வேண்டும். தகுதிவாய்ந்த நிரந்தர  ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;