மணப்பாறை, மார்ச் 27- தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர் கின்றன. ஏற்கனவே தமிழ்நாட் டில் 42 பேர் ஆன்லைன் சூதாட் டத்தில் பணத்தை இழந்து தற் கொலை செய்தனர். இந்த நிலை யில் 43-ஆவது நபராக திருச்சி ராப்பள்ளி மாவட்டம் மணப் பாறைப் பகுதியில் கூலித் தொழி லாளி ஒருவர் உயிரை மாய்த் துக்கொண்டார். மணப்பாறை தாலுகா காரன் பட்டி சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய பொன்னுசாமி. இவரது மகன் வில்சன் (26). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான வில்சன் சொற்ப வருமானத்தில் ஆன்லைன் ரம்மி யில் காசை இழந்தார். பின்னர் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். எதிர் பார்த்த பணம் கிடைக்குமென நம்பி ஏமாந்த வில்சன் ஞாயிறு இரவு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி திங்களன்று வில்சன் உயிரிழந்தார். வையம் பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டசபையில் கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அரசு கொண்டு வந் தது. பின்னர் ஆளுநரின் ஒப்புத லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராமல் திருப்பியனுப்பிவிட்டார். அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.