states

img

தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன 3 ஆவது மாநில மாநாடு - வரவேற்புக் குழு அமைப்பு

நாமக்கல், மே 30- தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்  மேளனத்தின் (சிஐடியு) 3 ஆவது மாநில மாநாட்டையொட்டி பள்ளிபாளையத்தில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. விசைத்தறி தொழிலை பாதுகாக்க ஜவுளி சந்தை அமைக்க வேண்டும். பருத்தி யை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க  வேண்டும். ஏற்றுமதி மற்றும் ஜவுளி நூல்  பதுக்கலை தடுத்து நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு  விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின்  3 ஆவது மாநில மாநாடு ஜூன் 28 அன்று  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற உள்ளது.  இம்மாநில மாநாட்டை சிறப்பாக நடத்  தும் வகையில் வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் ஞாயிறன்று மாலை பள்ளிபாளை யம் காவேரி ஆர்.எஸ் சிஐடியு சங்க அலு வலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு சம்மேளன மாநில உதவி செயலாளர் கே.மோகன் தலைமை வகித்தார். மாநாட்  டின் அவசியம் குறித்து சம்மேளன மாநில செயலாளர் எம்.சந்திரன் பேசினார். இதைத்தொடர்ந்து, வரவேற்பு குழு வின் தலைவராக என்.வேலுசாமி, செய லாளராக கே.மோகன், பொருளாளராக  எஸ்.முத்துக்குமார் உட்பட 25 பேர் கொண்ட நிர்வாக குழு மற்றும் 90 பேர்  கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட் டது. மாநாட்டின் பேரணி மற்றும் பொதுக்  கூட்டம் பள்ளிபாளையம் நேரு திடலில்  நடத்துவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்  பட்டது.