சென்னை, ஜூலை 4- தமிழகத்தில் கற்றுத் தரப்படும் போலியான நர்சிங் படிப்புகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு செவிலியர் குழுமம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல கல்லூரிகளில் பல வகையான நர்சிங் படிப்புகள் கற் றுத் தரப்படுகின்றன. இதில் பல படிப்பு கள் போலியானவை என்று தமிழக நர்சிங் குழுமம் வெளியிட்டுள்ள அறி விப்பின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தமிழக செவிலி யர் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப் பில் தெரிவித்திருப்பதாவது: “தமிழ்நாட்டில் நர்சிங் கல்லூரி களுக்கு அங்கீகாரம் அளிப்பது தமிழ் நாடு நர்சிங் கவுன்சில் மற்றும் இந்திய நர்சிங் கவுன்சில் ஆகும். எனவே நர் சிங் படிப்புகளில் சேரும் மாண வர்கள் தாங்கள் சேரும் கல்லூரி அங்கீ காரம் பெற்றுள்ளதா என்பதை https: //www.tamilnadunursing council.com/recognised_institutions.php என்ற இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா முழுவதும் Certificate Course in Auxiliary Nursing & Midwifery, Diploma in General Nursing & Midwifery, B.Sc., (Nursing) என்ற 3 படிப்புகள் மட்டும் அங்கீகாரம் பெற்ற படிப்புகள் ஆகும். ‘நர்சிங் பயிற்சி’ என்ற பெய ரில் பல பெரிய மற்றும் சிறிய மருத்துவ மனைகள், நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போலி நர்சிங் படிப்புகளை நடத்தி சான்றிகழ்களை வழங்குகிறார்கள். தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலின் சட்டப் பிரிவு 12(ஏ)(1) மற்றும் (2)ன் படி இது போன்ற போலி படிப்புகளை நர்சிங் என்ற பெயரில் நடத்தும் நிறு வனம், சங்கம் மற்றும் பல்கலைக்கழ கங்கள் மீது அபராதமும் உரிய நட வடிக்கையும் எடுக்கப்படும். மேலும் சென்னை உயர்நீதி மன்ற ஆணைப் படி, போலி நர்சிங் பயிற்சி நிறுவனங் கள் மீது தமிழக அரசின் நட வடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். மேலும் அங்கீகரிக்கப்படாத படிப்பு களை படித்தால் அரசுப் பணியில் சேர முடியாது என தெரிவிக்கிறோம். இந்த மாணாக்கர்கள் எந்தவொரு மருத்துவமனைகளிலும் அங்கீகரிக் கப்பட்ட செவிலியராக பணிபுரிய இய லாது. மேலும், நர்சிங் கவுன்சிலில் இப்படிப்பினை பதிவு செய்ய இய லாது. அங்கீகாரம் இல்லாத சான்றித ழுடன் பணிபுரிவதாக நர்சிங் கவுன் சிலின் கவனத்திற்கு தகவல் வந்தால், கவுன்சிலின் சட்டப்படி அவர்கள் மீது அபராதமும் கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்புள்ளது”. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.